Friday, August 21, 2015

வெற்றி பெறினும் வேண்டாம் !! சூது விளையாட்டு !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  சூது.


குறள் எண் :- 196.



வேண்டற்க வென்றிடினும் சூதினை                                                                               வென்றதூஉம்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று... ... ... 



பொருள் :-  சூதினால் வென்ற பொருள், தூண்டில் 

முள்ளை மீன் விழுங்கியதைப் போன்றது. 

ஆதலால் வெற்றியையே தந்தாலும் 

சூதாட்டத்தை மக்கள் விரும்பக்கூடாது. இதனை 

மீறி விரும்பினால், அது தாங்க முடியாத 

துன்பத்தை மட்டுமே தரக்கூடியது. இது 

திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.               

நாமும் வான்புகழ் வள்ளுவர் அறிவுரைப்படி 

வாழ்ந்திடுவோம்.                                                               


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன் திருமலை.இரா.பாலு.





No comments:

Post a Comment