தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- வரைவின் மகளிர்.
குறள் எண் :- 919.
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழம் அளறு... ... ... ...
விளக்கம் :- அளவுகடந்த அணிகலன்கள்உடைய
விலைமகளிரின் இனியதோள்கள்,அறிவில்லாத
கீழ்மக்கள் அழுந்துகின்ற நரகமே ஆகும். இது
வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம்:-
கந்தன் :- ஏண்டா கிந்தா என்னடா பத்துநாளா
உன்னைய நம்ம பேட்டை பக்கமே காணோம்.
எங்கே போயித் தொலைஞ்சே ?
கிந்தன் :- இல்ல அண்ணே எனக்கு கேரளா
லாட்டரியிலே 65 லட்ச ரூபா கிடைச்சது.
கந்தன் :- இங்க பாரடா இதுல்லே யோகம்ன்னு
சொல்றது. உம்..அப்புறம். சொல்லுங்க தம்பி.
அந்தப் பணத்தை வாங்கிட்டு எங்கே போனீங்க?
கிந்தன் :- நேரே பாம்பே போயி பத்து நாள் நல்லா
மனங்குளிர இன்பங்களை எல்லாம் ஆடி
அனுபவிச்சுட்டு நேத்துத்தான் ஊர் வந்து
சேர்ந்தேன்.
கந்தன் :- எத்தனை ஜாரிய பாத்தீங்க.
கிந்தன் :- அது ஒரு இருபதுக்கு மேலே இருக்கும்.
கந்தன் :- ஒ...அப்படியா. சரி அவளுக எல்லாம்
ஏகப்பட்ட நகை, நெக்லஸ்மாதிரிஅயிட்டங்களை
தோள்களில் கழுத்துகளில் தொங்க விட்டு
இருந்திருப்பாங்களே.
கிந்தன் :- ஆமா. அது எப்படி உங்களுக்குத்
தெரியும் ?நீங்கதான் ஏக பத்தினி விரதன் ஆச்சே.
கந்தன் :- ஏக பத்தினி விரதன் நான், ஆனால்
நீயோ ஏகப்பட்ட பத்தினி விரதன்
ஏண்டா தம்பி பாம்பு கடிச்சா
சாவோம் அப்படீங்கிறதை பாம்புகிட்டே
கடிவாங்கியாடா சொல்றோம் ? இல்லையே.
அது மாதிரித்தாண்டா இதுவும்.
அவளுக கழுத்து நரகங்களின் இருப்பிடம்
அப்படீன்னு நான் சொல்லலடா. நம்ம
திருவள்ளுவர் சொல்லியிருக்காரு.
அதாலே இதுவரை நீ செஞ்ச பாவம் எல்லாம்
போதும் இனியாகிலும் இந்த மாதிரி
விலைமாதர்கிட்டே போகிற
பாவம் வேணாம்டா தம்பி உனக்கு. திருந்துடா.
கிந்தன் :- அண்ணே இனிமே செத்தாலும் அந்தத்
தே,,,,,,,,,,யாளுக அந்த தட்டு கெட்டசெருக்கிகள்
இருக்கிற திசைப்பக்கம் தலைவச்சு கூட
படுக்க மாட்டான் உங்க தம்பி. இது சத்தியம்.
நான் வாறன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை. இரா. பாலு.
No comments:
Post a Comment