Monday, January 16, 2017

ஒருவருக்கு நல்லது செய்வதிலும் நமக்கு கெடுதல் ஏற்படக்கூடும் !! திருவள்ளுவர் அருளிய கருத்து !!



ஒருவருக்கு நல்லது செய்வதிலும் நமக்கு கெடுதல் ஏற்படக்கூடும் !! 

திருவள்ளுவர் அருளியகருத்துஇது !!


தினம் ஒரு திருக்குறள் !!

அதிகாரம்   :-  தெரிந்து செயல்வகை.

குறள் எண் :-  469.


நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் 

பண்பறிந் தாற்றாக் கடை... ... ... 

பொருள் :-  அவரவர்களுடைய பண்புகள் அறிந்து,
அதற்கு ஏற்றவாறு நாம் செயல்படவில்லை என்றால்,அவருக்கு நாம் நல்லது செய்வதிலும் நமக்கு இழுக்கு ஏற்படும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

பொன்னுத்தாயி :- உம்...என்ன செல்லத்தாயிக்கா 
அந்தப் பொம்பள செத்துப்போய் நாப்பது நாளைக்கு மேல ஆயிருச்சு. எம்புட்டு அரும்பாடு பட்டு கஷ்டப்பட்டு எத்தன பேர மோசம்பண்ணி, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எண்ணிக்கையே தெரியாத அளவுக்கு 
பணம்,தங்க,வைர,வைடூர்ய,பிளாட்டின இத்யாதி..இத்யாதின்னு சேர்த்து வச்சு, அசையாச் சொத்துக்கள் கணக்கிலடங்காதது என அம்புட்டும் சம்பாரிச்சு.... பாரேன் கடைசியிலே என்ன ஆச்சு ?

செல்லத்தாயி :- என்னத்தா ஆச்சு கடைசியிலே அத்தயும்நீயே சொல்லிப்புடு.... உக்கும்....

பொன்னு:-  என்ன ஆச்சா ? கூடவே ஒரு மூதேவிய தோழின்னு சேர்த்து வச்சிருந்தாங்கல்ல..

செல்ல :- ஆமா..யாரு..அந்தக் குடிகேடுத்தவ அதான்..அவபேருகூடஎனக்குமறந்துபோச்சே...ஆஇப்ப ..ஞாபகம் வந்திருச்சு..அந்த அவ..புஷ்கலாவை சொல்லுதியா ?

பொன்னு :-  அந்தப் பொட்டுக்கெடுத்த முண்டையத்தான்..என்ன செஞ்சா பாத்தியா..கடைசியிலே நல்லா 
இருந்த அந்தபொம்பளைய கீழே தள்ளிவிட்டு சாவடிச்சு அந்தால ரவுடிகள வச்சு அத்தாமொக்க ஆஸ்பத்திரி ஆளுகளையே பயமுறுத்தி, கிட்டத்தட்ட எழுபது எம்பது நாளைக்கு மேல செத்த பொணத்துக்கு இல்லடி வைத்தியம் பாக்க வச்சு, கடைசியில இப்ப என்ன ஆச்சு அம்புட்டு சொத்தையும் இந்த புஷ்கலா முண்டை 
ஆட்டையபோட்டுட்டாடி.. ஆட்டையப்போட்டுடா..
நல்ல பொம்பளயா இல்ல கெட்டவளாஅப்டின்னு 
தெரிஞ்சு சேக்காததால, கூடவே இருந்து குழியிலே தள்ளிப்புட்டால்ல. இதுக்குத்தான் அந்தக்காலத்துல சேரிடம் அறிந்து சேர் !! அப்டீன்னுபெரியவக நமக்கு சொல்லிருக்காங்க.

செல்லத்:-  இதையேதான் இன்னைக்கு நம்ம மதுரை பாலு ஐயா அவுங்க தினம் ஒரு திருக்குறள் முகநூல் பதிவுல வள்ளுவர் சொன்ன கருத்தை அழகா எடுத்துப் 
போட்டிருக்கார். நாம யாருக்கும் நல்லது செய்றதுக்கு முன்னாடி ஆளு எப்டிப்பட்ட ஆளு அத்த முதல்ல சரி பாத்துட்டு, அதுக்கு புறவுதான் அவுகள நாம கூட சேத்துக்கனும் அவுங்களுக்கு நல்லது செய்யணும்.அப்டி இல்லாங்காட்டி, அவுங்களுக்கு நாம செய்யற நல்லதே நமக்கு கெடுதலா வந்து சேரும். எப்படி நம்ம வள்ளுவர் ஐயா ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே சொல்லிருக்காரு பாரு. சரிங்கக்கா கொஞ்சம் சந்தைக்கு போயி காய்கறி வாங்கணும்.
அப்பால நாளைக்கு நாம பார்க்கலாம். வரட்டா ?

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

Wednesday, November 16, 2016

சாமியாராகவும் வேண்டாம் சந்நியாசியாக போகவும் வேண்டாம் !! எப்போது ? திருவள்ளுவர் தந்த விளக்கம் !!





சாமியாராகவும் வேண்டாம் !!
சந்நியாசியாகபோகவும்வேண்டாம்!!


தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம்   :-  கூடா ஒழுக்கம்.
குறள் எண் :-  280.


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்... ... ...


பொருள்  :-  தவக்கோலத்தைக் வெளிக்காட்ட 
மொட்டை அடிக்கவோ முடி வளர்க்கவோ 
தேவையில்லை. உலகம் பழித்திடும் செயல்களை ஒழித்துவிட்டாலே போதும். இது வான்புகழ்திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கந்தன் :-  என்ன கிந்தன் தம்பி ரொம்ப நாளா 
ஏரியா பக்கமே பாக்க முடிலே. என்ன ஊருக்கு 
போயிருந்தீகளா.
கிந்தன்:-  ஆமா அண்ணே எங்க அக்கா வூடு 
விழுப்புரத்துல இருக்கு. அக்கா பொண்ணு 
பெரிய மனுசி ஆயிருச்சு. அதான் தாய்மாமன் 
நான் முறை செய்ய போனேன். 
கந்தன் :- அப்ப உனக்கு பொண்ணு ரெடி 
ஆயிடுச்சுன்னு சொல்றா தம்பி.
கிந்தன் :- ஐயய்யோ .. அதெல்லாம் இல்ல 
அண்ணே. எனக்கும் அக்கா பொண்ணுக்கும்
10 வருஷம் வயசு வித்தியாசம். நான் மூப்பு.
அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.
கந்தன் :- ஏண்டா தம்பி இன்னைக்கு தமிழ் 
மாசம் கார்த்திகை ஒன்னாம் தேதி. நம்ம 
பேட்டை ரவுடி பெருமாள் பிச்சை என்னடா 
காலைலே சீக்கிரமா எழுந்து கோவிலுக்குப் 
போயி காவிவேட்டி காவி சட்டை கருப்பு 
துண்டு அமர்க்களமா எங்கடா போறான் ?
உனக்கு எதுனாச்சும் தெரியுமாடா ?
கிந்தன் :-  உங்களுக்கு விசயமே தெரியாதா ?
அண்ணே அவன் சபரிமலைக்கு போறான்னே.
அதான் வெள்ளென எழுந்து குளிச்சு சாமி 
கும்பிட்டு மாலை போட்டு விரதம் ஆரம்பிக்க 
கோயிலுக்குப் போயிருப்பான்.
கந்தன் :- கிழிஞ்சுது போ. வருசம் பத்துமாசம் 
டாஸ்மாக் கடையே கதின்னு கிடந்தது குடிக்க 
வேண்டியது. கோனார் கடைலே அல்லா 
மாமிசத்துலே இருந்து கோழி,காடை,கவுதாரி,
மீன் அது இதுன்னு வெட்ட வேண்டியது. இந்த 
ரெண்டு மாசம் மட்டும் என்ன யோக்கியன் 
வேசமாட போடுறான் அந்த பேமானி.
கிந்தன் :- சரி. விடுங்க அண்ணே. ஏதோ இந்த 
ரெண்டு மாசமாச்சும் அந்தக் கசமாலத்தை 
எல்லாம் நினைக்காம, துன்னாம, குடிக்காம 
இருக்கானே அத்த நினைச்சு பெருமைப்படுங்க 
அண்ணே.
கந்தன் :- அடே..தம்பி.. வருஷம் பூராவும் சுத்தமா 
இருக்கனும்டா. அதுலேயும் மனசு..மனசு..அது 
சுத்தமா இருந்தா அது போதும்டா. இந்த வெளி 
வேசம் எல்லாம் எதுக்குடா ? தம்பி. என்ன நான் 
சொல்றது. இத்த நான் மட்டும் சொல்லலடா 
நம்ம அய்யன் திருவள்ளுவர் அவர்கூட இத்த 
பத்தி ஒரு குறள்ளே சொல்லிக்கீறார்டா. இப்ப 
நம்ம மதுரை TR. பாலு, தினம் ஒரு திருக்குறள் 
அப்டின்னு வலைதளத்துலே எழுதுரார்ல.
அத்த படிச்சுட்டுத்தண்டா வாரேன். 
கிந்தன் :- அப்டியாண்ணே. வள்ளுவர் இத்தக்கூடவா எழுதிருக்காரு ?
கந்தன் :-  அட..ஆமாடா..என் அருமைத்தம்பி.
நீ மொட்டை அடிக்கவும் வேணாம் தாடி வளக்கவும் வேணாம். உலகம் பழிக்கும் காரியங்கள் எதையுமே செய்யாம இருந்தா போதும். அப்டின்னு. எப்படி பாத்தியாடா தம்பி. வள்ளுவர் வள்ளுவர்தாண்டா.அதனாலதான் நம்ம தல கலைஞர், அன்னாருக்கு 
கன்னியாகுமரி மூணு கடலும் சேரும் இடத்துல 
அம்புட்டு உயர சிலை வச்சிருக்காருடா. அதக்கூட இந்த சர்க்காரு சரியா பெயின்ட் அடிச்சு காப்பாத்த மாட்டேன்றாங்க. ஏன்னா சில வச்ச பெருமை அவருக்குப் போயிரும் என்ற சின்ன புத்திடா தம்பி. சரி அப்பால நேரம் ஆச்சு. வாரேண்டா தம்பி.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T,R.பாலு.

Friday, November 4, 2016

சில இடங்களில்பொய் சொல்வது கூட வாய்மைக்கு நிகராகும் (?) திருவள்ளுவர் அருளிச்சென்றது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  வாய்மை.

குறள் எண் :-  292



பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்... ... ...

பொருள்  :-  குற்றம் அற்ற நன்மையைத் தரும் 
என்றால், சொல்லுகின்றபொய்கூடவாய்மைக்கு 
நிகராகும். இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு 
வழங்கிச் சென்ற திருக்குறளும்அதன்பொருளும் 
ஆகும்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

******************************************************
                        

                              " பொறுப்பு துறப்பு "


( பின் குறிப்பு :-  இந்தக்குறளின் பொருளுடன், நேற்று அப்போலோ மருத்துவமனை இயக்குனர் திருமிகு.C. பிரதாப் ரெட்டி அவர்கள் ஊடகமற்றும் பத்திரிக்கைநண்பர்களுக்கு அளித்த பேட்டியை நேயர்கள் ஒப்பிட்டுப்பார்த்தால், அதற்கு பதிப்பாளராகிய மதுரை T.R. பாலு, எந்தவிதத்திலும் பொறுப்பல்ல என்று அறிவிக்கப்படுகிறது.)

Monday, October 31, 2016

நோயால் உயிருக்கு எந்நாளும் துன்பம் இல்லை !! திருவள்ளுவர் கருத்து இது !!




நோயால் உயிருக்குஎந்நாளும் துன்பம்இல்லை !!



தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  மருந்து.

குறள் எண் :-  945.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் 
ஊறுபாடு இல்லை உயிர்க்கு ... ... ...

பொருள்  :-  உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவினை மறுத்து,ஒத்துக்கொள்ளும் உணவினையே உண்டு வாழ்ந்தால், உயிருக்கு துன்பம் இல்லை. வான்புகழ்திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

புனிதா :- என்ன லலிதா அக்கா, உங்க அம்மாவை ஆஸ்பத்திரிலே சேத்து இன்னைக்கு கிட்டத்தட்ட நாப்பது நாளைக்கு மேலே இருக்குமுல்ல. இப்ப என்ன சொல்றாங்க ?
லலிதா :- அந்தக் கொடுமைய ஏன் கேக்குற தங்கச்சி
புனிதா :- சொல்லுங்க அக்கா. சொன்னாதானே எங்களுக்கு தெரியும் ?
லலிதா :- உனக்குத்தான் தெரியுமேஎன்னப்பெத்த 
எங்க அம்மா வேதவல்லி, எப்படி பணம் சம்பாதிச்சாங்க, எப்படி எல்லாம் ஆட்டம் போட்டாங்க ? யார் யார் கூட எல்லாம் சேரக்கூடாதோ அவங்களோட சேந்து கிட்டு 
எங்களை எல்லாம் வீட்டை விட்டு விரட்டி அடிச்ச கதை.
புனிதா :-  ஆமா அக்கா அது நம்ம தெருவே தெரிஞ்ச கதை தானே. இப்ப உங்க அம்மா எப்டி இருக்காங்க ?
லலிதா :- அட..அதைத்தாண்டி சொல்ல வாறன் அறிவு கெட்டவளே. எங்கள யாரையும் உள்ள போய் பாக்க வுட மாட்டேங்குறா அந்தக் கூடவே இருக்குல்ல ஒரு சனியன்.
புனிதா :-யாருஅந்தபுஷ்கலாவைசொல்றீங்களா ?
லலிதா :- அந்தப் பொட்டுக்கெடுத்தவதான் அவ என்னப்பெத்த எங்க ஆத்தா சம்பாரிச்ச அம்புட்டு சொத்தையும் அவ மட்டுமே ஆட்டைய போடப் பாக்குறாடி. ஆட்டைய போடப் பாக்குறா ? இந்த அநியாயத்தை யார்ட்ட போய்சொல்ல ?
புனிதா :- ஏன்க்கா, கேக்குறேன்னு தப்பா எடுக்கலன்னா நான் ஒன்னு கேக்குறேன்.
லலிதா :- சும்மா கேளுரி தங்கச்சி. எனக்கு உன்ன விட்டா வேற யாருடி இருக்கா ? கேளு..கேளு..
புனிதா :-  உங்கள பெத்த அம்மாவுக்கும் அந்த புஷ்கலாவுக்கும் எப்டிக்கா நட்பு வந்துச்சு ?
லலிதா :- அந்தக் கொடுமைய ஏன் கேக்குற. எங்க அப்பா ராமச்சந்திரன் பிள்ளை செத்துப்போன பொறவு இந்த இழவெடுத்தவ ஒரு சேலக்கடை வச்சிருந்தா. அங்க அடிக்கடி எங்க அம்மா போவாங்க.அப்ப இந்த செருக்கி எங்கம்மாட்ட ஏகப்பட்ட பணம் இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு எங்கம்மாவ வசப்படுத்திக்கிட்டாடி. அவ எங்க 
அம்மாக்கு என்ன சொக்குப்பொடி போட்டாளோ 
தெரில, எங்கள அல்லாம் சுத்தமா வெறுத்து ஒதுக்கிட்டு வீட்ட விட்டு விரட்டிட்டு, அந்த பாழாப்போறவளோட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் எங்க அப்பா ஆச ஆசயா 
கட்டுன தாமஸ் கார்டன் வூட்டுல கொண்டாந்து வச்சுக்கிட்டாங்க. யார் கேக்குறது இந்த அநியாயத்த ?
புனிதா :- சரி.அதல்லாம் விடுங்க அக்கா. இப்ப உங்கம்மா உடம்புக்கு ஏன் இம்புட்டு வியாதி வந்துச்சு ? அத்த கொஞ்சம் சொல்லுங்க.
லலிதா :- எல்லாம் அந்தக் கழுதையோட சேந்துகிட்டு எப்பப்பாத்தாலும் குடிச்சுக்கிட்டு, கண்ட கண்ட கருமாந்திரத்தயும் துன்னுக்கிட்டு இருந்தா ? வியாதி வராதா ? எங்க அம்மாக்கு இல்லாத வியாதியேகிடையாதே.ரத்தக்கொதிப்பு, சக்கரை நோய் இன்னும் உலகத்துல உள்ள அம்புட்டு வியாதியும் இப்ப ஒன்னு சேந்துகிட்டு, எங்க ஆத்தாள படுத்த படுத்த படுக்கையா  
போட்டுருச்சு தங்கச்சி.
புனிதா :-  அக்கா இன்னைக்கு நம்ம மதுரை பாலு சார்எழுதியிருக்குற " தினம் ஒரு திருக்குறள் " வலைத்தளப் பதிவு அத்த படிச்சுட்டுத்தான் வந்தேன்.
லலிதா :- என்னடி சொல்லிருக்காரு அந்த மனுசன் ?
புனிதா :-  அக்கா, நம்ம உடம்பு எந்த உணவ யேத்துக்கிடுதோஅத்த மட்டும்தான் நாம சாப்பிடனுமாம். ஏத்துக்காத உணவ எல்லாம் நாம சாப்பிடாம இருந்தா உயிருக்கு 
எப்பவுமே ஆபத்து இல்லையாம்  அடிப்டின்னு திருவள்ளுவர் சொல்லிருக்காராம்.
லலிதா :- என்னை பெத்த ஆத்தா அப்டி எல்லாம் வாழவே இல்லையேடி தங்கச்சி. அந்த கேடுகேட்டவளோட சேந்து தினமும் குடிச்சு, ஐஸ் கிரீம் சாப்புட்டு சக்கரைவியாதிய வளத்து இன்னைக்கு இந்தக் கதிக்கு ஆளாகி படுத்துக் 
கிடக்காங்க. என்ன செய்ய ?
புனிதா :-  சரிக்கா எனக்கு நேரம் ஆச்சு. என் வூட்டுக்காரர் வேல முடிச்சு வர நேரமாச்சு. பாத்துக்குங்க அம்மாவ.என்ன ஆனாலும் சொல்லி அனுப்புங்க. நான் ஓடோடி 
வந்துறேன். வரட்டா அக்கா .
லலிதா :- சரிடி தங்கச்சி. பாத்து கோளாறா போயிட்டு வா.

***************************************************************

நன்றி. வணக்கம்.

அன்புடன். மதுரை. TR.பாலு.

Friday, October 7, 2016

இந்த உலகத்தின் பெருமை என்ன ? திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற கருத்து !!





           இந்த உலகத்தின் பெருமை !!




தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  நிலையாமை.

குறள் எண் :-  336.





நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் 

பெருமை உடைத்து இவ்வுலகு... ... ...


பொருள் :-  நேற்று உயிருடன் இருந்த ஒருவன் 
இன்று இல்லை என்னும் பெருமையினையே 
இவ்வுலகம் பெற்றிருக்கிறது. இது வான்புகழ் 
திருவள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும்
அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

தங்கையா :- என்னடா தம்பி சங்கையா இன்னைக்கோட இருபத்தி அஞ்சு நாளாச்சு உங்க சித்தப்பு சிங்காரத்தை அப்போலோ ஆஸ்பத்திரிலே சேத்து. என்னதாண்டா 
சொல்றாய்ங்க ? 

சங்கையா :- அண்ணே என்னத்த சொல்றாங்க ?
அந்த டெஸ்ட் எடுக்கணும் இந்த டெஸ்ட் எடுக்கணும் அப்டி இப்டின்னு சொல்லி பணந்தான் கரஞ்சுட்டே இருக்கு. ரூமுக்குள்ள கூட வுட மாட்டேங்கிராய்ங்க

தங்க :- சரி விடுறா தம்பி என்ன உங்க சித்தப்பு பாடு பட்டு சம்பாரிச்சாறு ? எல்லாம் ஊர அடிச்சு உலையில போட்டு, பஞ்சாயத்து தலைவரா இருந்துகிட்டு அம்புட்டும் கொள்ளை அடிச்சு சம்பாரிச்சதுதானே என்ன நான் சொல்றது ?

சங்க:- எண்ணே லந்து பண்றதுக்கு உங்களுக்கு 
கால நேரமே கிடையாதா ? அவரே உசுருக்குப் 
போராடிட்டு இப்பயோ புறவோன்னு இருக்காரு.
அவரப்போயி இப்படி பேசலாமா அண்ணே ?

தங்க:- அட..இங்க பாருரா தம்பிக்கு கோவம் 
பொத்துக்கிட்டு வருது.

( அப்போது மருத்துவர் வந்து சங்கையாவ
தனியா கூட்டிப்போயி ஏதோ சொல்ல அவனும் 
அதிர்ச்சி அடைஞ்சு அய்யய்யோ சித்தப்பா 
எங்கள எல்லாம் வுட்டுட்டுப் போயிட்டீங்களா ?
என்று அலறிக்கத்திக்கொண்டு அழுதபடியே 
அண்ணன் தங்கையாவை கட்டிக்கொள்கிறான்.)

தங்கையா :- சரி..சரி..விடுறா..விடுறா தம்பி.
ஏன்னா செய்றது. மனுசனா பொறந்தா அல்லாரும் ஒருநாள் போய்ச்சேர வேண்டியதுதான். இந்தா பாரு நேத்து உசுரோட இருந்தாரு உங்க சித்தப்பு இன்னைக்கி செத்துப்போய்ட்டாறு. இதுதான்டாதம்பி இந்த உலகத்தோட சிறப்பும் பெருமையும் 
அப்டின்னு நம்ம வள்ளுவரே சொல்லிருக்காரு.
சரி..அடுத்து நடக்க வேண்டிய வேலயப்பாருடா.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு. 

Tuesday, October 4, 2016

நமக்கு கெடுதல் செய்தவர்களை எப்படி தண்டித்திட முடியும் ? திருவள்ளுவர் காட்டிய வழி !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  இன்னா செய்யாமை.

குறள் எண் :-  314.




இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 

நன்னயம் செய்து விடல்... ... ... 

பொருள் :-  தனக்கு துன்பம் செய்தவரை 
தண்டித்தல் என்பது அவருக்கு நன்மைகளைச் 
செய்து அவர் வெட்கப்பட்டு திருந்துமாறு 
செய்தலே ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 
பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

ஜமுனா :-  என்ன புவனா அக்கா தீபாவளிக்கு 
ஜவுளி எல்லாம் எடுத்தாச்சா என்ன ? இன்னும் 
25 நாள்தானே இருக்கு.

யமுனா :- அட போடி பைத்தியக்காரி, இங்க
இன்னும் இந்த மாச செலவுக்கே அவன் காசு 
தராம இருக்கான்.

ஜமுனா :- என்னக்கா இருந்தாலும் தொட்டுத் 
தாலி கட்டிய புருசனை இப்படி அவன் இவன் 
அப்டின்னு கொஞ்சம்கூட மருவாதி இல்லாம 
பேசுறது நல்லாவா இருக்கு ?

யமுனா :-  ஏய்..அவன் மேலே இருக்குற 
கடுப்பில உனக்குத்தான் இப்ப உதை விழப் 
போவுது. வூட்டு செலவுக்கு காசுதராம 
இருக்குற பய, ராத்திரி டாஸ்மாக் கடைலே 
மட்டுமே கொண்டு போய் கொட்டுறான். அத்த 
யார்டி கேக்குறது ?

ஜமுனா :- அதுக்கு நீதானே காரணம். நல்லவங்க 
ஆட்சிக்கு வரணும் சாராயக் கடையை இழுத்து 
மூடுவாங்கஅதாலேஅவங்களுக்குபோடுங்க உங்க ஓட்டு என்று  சொன்னேன். நீங்க கேக்கல வெறும் இருநூறுக்கும் முன்னூறுக்கும் ஒரு பிரியாணி போட்டலத்துக்கும் ஆசைப்பட்டு இவளுக்கு போட்டீங்க. இப்ப அனுபவிக்கிறீங்க. சரி. அது கிடக்கட்டும். இப்ப இந்த பொம்பள உடம்புக்கு முடியாம படுத்துக் கிடக்கு.அது நிசமோ இல்லாங்காட்டி பொய்யோ அது வேற விசயம். இருந்தாலும் , நம்ம தல, அவருக்கு எம்புட்டு கெடுதல் இது செஞ்சிருக்கு. அத்த எல்லாம் மனசுல கொஞ்சம் கூட வச்சிக்கிடாம, அது வெட்கப்படுற மாதிரி சீக்கிரம் உடல் நலமாகி வூட்டுக்கு வர வாழ்த்தி ஒரு அறிக்கை விட்டார்பாரு, அங்கதாண்டி தல நிமிந்து நிக்கிறாரு.எப்படிஅந்தபொம்பளைய தண்டிச்சார் பாத்தியாடி. ஏன்னா அவரு வள்ளுவர் காட்டிய வழியில வாழ்றவர்டி. இத்த நம்ம மதுரை பாலு சார் இன்னைக்கு எழுதியிருக்கிற தினம் ஒரு திருக்குறள் பகுதியில போட்டிருக்கிறதை முகநூல் பதிவைப் படிச்சுட்டுத்தான் சொல்றேன். முடிஞ்சா நீயும் படிறி. எனக்கு கொஞ்சம் வேல கிடக்கு.உன்ன அப்பால பாக்கிறேன். வரட்டா.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை. TR. பாலு. 

Wednesday, September 28, 2016

நண்பர்களை முறையாகத் தேர்ந்தெடுத்து செயல்படாதவர்களது முடிவு எப்படி இருக்கும் ? வள்ளுவர் தந்த விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-   நட்பு ஆராய்தல்.

குறள் எண் :-  792.




ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை                                                                                                  கடைமுறை 
தான்சாம் துயரம் தரும்... ... ...

பொருள்  :-  பலமுறை ஆராய்ந்த பின்பே நட்பு 
கொள்ள வேண்டும். அப்படி நட்பு ஏற்படுத்திக் 
கொள்ளாதவர்களது நட்பு, இறுதியில் சாகின்ற 
அளவிற்குத் துன்பத்தையே தரும். வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

லலிதா :-  வாங்க..வாங்க..புனிதா அக்கா.. என்ன 
அத்தி பூத்த மாதிரி இருக்கு ? ஒரு வார்த்தை 
சொல்லி அனுப்பிருந்தா நானே வந்திருப்பேனே 
அக்கா ?
புனிதா :-  அதனால என்ன தங்கச்சி. இப்பத்தான் 
ஆஸ்பத்திரிலே இருந்து வாரேன்.
லலிதா :- ஐயய்யோ ..என்னக்கா ? யாருக்கு என்ன உடம்புக்கு ?
புனிதா :-  சும்மா ஒன்னுமே தெரியாதமாதிரி 
கேக்காதடி. எல்லாம் நம்ம கட்சித் தல கடந்த 
ஒருவாரமா உடம்புக்கு நோவு வந்து படுத்துக் 
கிடக்குறதுதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே.
லலிதா :- ஏன்.நல்லாத்தானே இருந்துச்சு அந்தப் 
பொம்பள உடம்பு. திடீர்னு என்னக்கா வந்துச்சு
உடம்புக்கு.
புனிதா :- அடியே தங்கச்சி. எல்லாம் சேர்க்கை 
வச்சுக்கிட்டாங்களே நல்ல குடும்பத்தோட.
அவங்க கெடுத்தகேடு இன்னைக்கு இந்தளவு 
சாகுறவரைக்கும் கொண்டாந்து விட்ருச்சு.
லலிதா :-  யாருக்கா அந்த மன்னார்குடி 
கொள்ளைக்கூட்டத்தலைவி மசிகலாவைத் 
தானே சொல்றீங்க.
புனிதா :-  ஆமாடி. அவளுகளோட, தலைவி 
என்னைக்கு ஆராய்ந்துபாக்காம தொடர்பு 
எற்படுத்திக்கிட்டாங்களோ அன்னைக்கு 
புடிச்சது சனி இவங்களுக்கு. இன்னைக்கு 
கடைசியிலே என்ன ஆச்சு. பழகக்கூடாத 
பழக்கங்களை ஏற்படுத்திக்கிட்டு அதனால 
சக்கரை வியாதி உச்சத்தைத் தொட்டு 
இன்னைக்கு இந்த பாரு ஆஸ்பத்திரியில 
படுத்துக்கிடக்காங்க. தேவையா இவங்களுக்கு 
இந்தத் துன்பம் துயரம். இத்தத்தான்அன்னைக்கே 
நம்ம வள்ளுவர் திருக்குறள் ஒன்னுலே 
எழுதியிருக்காரு. ஒருத்தரோட நட்பு நாம 
எற்படுத்திக்கிறதுக்கு முன்னால அவங்க யாரு 
எப்படிப்பட்டவங்க, நல்லவங்களா இல்லஅவங்க கெட்டவங்களா என ஆராய்ந்து பார்த்து அதுக்கு அப்புறம்தான் நட்பு செய்துக்கணும் அப்டின்னு. அதைத்தான் நம்ம மதுரை பாலு சார் இன்னைக்கு அவரோட முக நூல் பதிவுலே எடுத்துப்போட்டிருக்காரு அத்த 
படிச்சுட்டுத்தான் நான் வரேன். முடிஞ்சா நீயும் 
படி தங்கச்சி. நல்லவங்களோட மட்டும் நீ நட்பு 
எற்படுத்திக்கடி. என்ன..சரியா ?
லலிதா :- நீங்க சொல்றது உண்மைதான் அக்கா.
கேக்குறேன்னு நீங்க தப்பா எடுத்துக்கல அப்டின்னா உங்கள ஒன்னு கேக்கவா ?
புனிதா :- கேளும்மா தாராளமா ?
லலிதா :- ஏன்க்கா நீங்க நல்லவங்களா ? இல்ல 
கெட்டவங்களா ?
புனிதா :- ஏண்டி உனக்கு எம்புட்டு கொழுப்பு 
இருந்தா, என்கிட்டேயே..என்கிட்டேயே..இப்டி 
ஒரு கேள்விய கேப்பே. அடி கொன்னே போட்றுவேன் உன்னைய பாத்துக்க.
******************************************************

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.