நண்பர்களை முறையாகத் தேர்ந்தெடுத்து செயல்படாதவர்களது முடிவு எப்படி இருக்கும் ? வள்ளுவர் தந்த விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- நட்பு ஆராய்தல்.
குறள் எண் :- 792.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்... ... ...
பொருள் :- பலமுறை ஆராய்ந்த பின்பே நட்பு
கொள்ள வேண்டும். அப்படி நட்பு ஏற்படுத்திக்
கொள்ளாதவர்களது நட்பு, இறுதியில் சாகின்ற
அளவிற்குத் துன்பத்தையே தரும். வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும்
அதன் பொருளும் ஆகும்.
நாட்டு நடப்பு விளக்கம் :-
லலிதா :- வாங்க..வாங்க..புனிதா அக்கா.. என்ன
அத்தி பூத்த மாதிரி இருக்கு ? ஒரு வார்த்தை
சொல்லி அனுப்பிருந்தா நானே வந்திருப்பேனே
அக்கா ?
புனிதா :- அதனால என்ன தங்கச்சி. இப்பத்தான்
ஆஸ்பத்திரிலே இருந்து வாரேன்.
லலிதா :- ஐயய்யோ ..என்னக்கா ? யாருக்கு என்ன உடம்புக்கு ?
புனிதா :- சும்மா ஒன்னுமே தெரியாதமாதிரி
கேக்காதடி. எல்லாம் நம்ம கட்சித் தல கடந்த
ஒருவாரமா உடம்புக்கு நோவு வந்து படுத்துக்
கிடக்குறதுதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே.
லலிதா :- ஏன்.நல்லாத்தானே இருந்துச்சு அந்தப்
பொம்பள உடம்பு. திடீர்னு என்னக்கா வந்துச்சு
உடம்புக்கு.
புனிதா :- அடியே தங்கச்சி. எல்லாம் சேர்க்கை
வச்சுக்கிட்டாங்களே நல்ல குடும்பத்தோட.
அவங்க கெடுத்தகேடு இன்னைக்கு இந்தளவு
சாகுறவரைக்கும் கொண்டாந்து விட்ருச்சு.
லலிதா :- யாருக்கா அந்த மன்னார்குடி
கொள்ளைக்கூட்டத்தலைவி மசிகலாவைத்
தானே சொல்றீங்க.
புனிதா :- ஆமாடி. அவளுகளோட, தலைவி
என்னைக்கு ஆராய்ந்துபாக்காம தொடர்பு
எற்படுத்திக்கிட்டாங்களோ அன்னைக்கு
புடிச்சது சனி இவங்களுக்கு. இன்னைக்கு
கடைசியிலே என்ன ஆச்சு. பழகக்கூடாத
பழக்கங்களை ஏற்படுத்திக்கிட்டு அதனால
சக்கரை வியாதி உச்சத்தைத் தொட்டு
இன்னைக்கு இந்த பாரு ஆஸ்பத்திரியில
படுத்துக்கிடக்காங்க. தேவையா இவங்களுக்கு
இந்தத் துன்பம் துயரம். இத்தத்தான்அன்னைக்கே
நம்ம வள்ளுவர் திருக்குறள் ஒன்னுலே
எழுதியிருக்காரு. ஒருத்தரோட நட்பு நாம
எற்படுத்திக்கிறதுக்கு முன்னால அவங்க யாரு
எப்படிப்பட்டவங்க, நல்லவங்களா இல்லஅவங்க கெட்டவங்களா என ஆராய்ந்து பார்த்து அதுக்கு அப்புறம்தான் நட்பு செய்துக்கணும் அப்டின்னு. அதைத்தான் நம்ம மதுரை பாலு சார் இன்னைக்கு அவரோட முக நூல் பதிவுலே எடுத்துப்போட்டிருக்காரு அத்த
படிச்சுட்டுத்தான் நான் வரேன். முடிஞ்சா நீயும்
படி தங்கச்சி. நல்லவங்களோட மட்டும் நீ நட்பு
எற்படுத்திக்கடி. என்ன..சரியா ?
லலிதா :- நீங்க சொல்றது உண்மைதான் அக்கா.
கேக்குறேன்னு நீங்க தப்பா எடுத்துக்கல அப்டின்னா உங்கள ஒன்னு கேக்கவா ?
புனிதா :- கேளும்மா தாராளமா ?
லலிதா :- ஏன்க்கா நீங்க நல்லவங்களா ? இல்ல
கெட்டவங்களா ?
புனிதா :- ஏண்டி உனக்கு எம்புட்டு கொழுப்பு
இருந்தா, என்கிட்டேயே..என்கிட்டேயே..இப்டி
ஒரு கேள்விய கேப்பே. அடி கொன்னே போட்றுவேன் உன்னைய பாத்துக்க.
******************************************************
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
No comments:
Post a Comment