தினம் ஒரு திருக்குறள்.
அனைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவருக்கும் தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் தருவதில் நான் மிகப்பெரும்
மகிழ்ச்சி அடைகிறேன்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.. .. .. .. .. ( குறள் எண் 260)
(அதிகாரம்: புலால் மறுத்தல்)
மேலே சொன்ன குறளுக்கு என்ன விளக்கம் என்று கேட்டால் எந்த ஒரு
உயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் எவன் ஒருவன் வாழ்கின்றானோ அவனை இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர் இனமும் கைகூப்பி வணங்கும்! இது வள்ளுவன் நமக்கு அளித்த அறிவுரை.ஏற்று கொண்டு செயல்படுவோமா நேயர்களே!மீண்டும் நாளை மற்றும் ஒரு குறள் விளக்கத்தில் சந்திக்கிறேன்.
அதுவரை உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.வணக்கம்.
அன்பன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment