Thursday, February 28, 2013

தினம் ஒரு திருக்குறள்!!

திருக்குறள்  


அனைவருக்கும் வணக்கம். இன்று உங்கள் அனைவருக்கும் நான் தரஉள்ள குறளும் அதன் விளக்கமும் என்னவென்றால்:-


 அதிகாரம்:-இனியவை கூறல் 

குறள் எண்: 1௦௦ 


 இனிய உளவாக இன்னாத கூறல் 

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று .. 


இனிய சொற்கள் நம்மிடையே உபயோகிப்பதற்கு  எவ்வளவோ இருக்கும்போது  அவற்றை எல்லாம் விட்டுவிட்டு கடுமையான சொற்களை கூறுதல்எப்படி இருக்கிறதென்றால்   ஒரு தட்டில் பழுத்த  பழங்கள் உண்ணும் பக்குவத்தில் இருக்கும்போது அவற்றை எல்லாம் நாம்   உண்ணாமல் மரத்தில் இருக்கும் காய்களை பறித்து  உண்ணுவதைப்  போன்றது.எனவே கடும்சொற்களை பயன்படுத்தாமல் இனிமை நிறைந்த சொற்களை பயன்படுத்துங்கள் என்று வள்ளுவர் சொன்னபடி வாழ்வில் கடைப்பிடித்து நாம் வாழ்வோமா நேயர்களே!நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment