Friday, March 1, 2013

திருக்குறள் விளக்கம்

தினம் ஒரு திருக்குறள் 




                            எனது அன்பு நிறைந்த குறள்தனை நேசிக்கும்  இனிய தமிழ் 

நெஞ்சங்களே!! உங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். இன்று   

நான் உங்கள் அனைவரின் சிந்தனைக்கு தரும் குறளும் அதன் விளக்கமும்:-  


                               '        அதிகாரம் :-   அழுக்காறாமை 


                                                  குறள் எண் : 169


                            அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ செவ்வியான்
                           
                                 கேடும்  நினைக்கப் படும்... .. .. . ........ ...... .................


அதாவது வள்ளுவப்பெருந்தகையிடம் ஒருவன்கேட்கிறான் .என்னவென்றால்

அய்யா கெட்ட நெஞ்சம் உள்ளவன் ஊரை அடித்து உலையில்போட்டு லஞ்ச

லாவண்யங்களில் கோடிகோடியாய் சம்பாதித்தவன்  வீடு வாசல் தோட்டம்

வேலைக்கு ஆட்கள் ,கார்,,போன்ற சகல செல்வங்களுடனும் வாழ்ந்திட,

உண்மையும் நேர்மையும் பேசி சத்தியத்துடன் வாழ்ந்திடும் ஒருவன் அவனின்

அன்றாட தேவைகளுக்கே சிரமப் படுகிறானே ஐயா!இது என்ன நியாயம்!!என்ற

கேள்விகணையைவள்ளுவன்முன் வைக்கிறான். வள்ளுவனோ புன்முறுவல்

பூத்த முகத்துடன் பதில் சொல்கிறான்.என்ன பதில் அது?

இது முன்ஜென்ம வினைப்பயன்தான் என்கின்றார் வள்ளுவர். அதாவது கெட்ட

நெஞ்சம் படைத்த பிரமுகர் கடந்த ஜென்மத்தில் செய்திட்ட புண்ணியங்கள்

அவனுக்கு இந்த பிறவியில் பலன் தருகிறது.அது போல இப்பிறவியில் நல்ல

எண்ணங்களுடன் வாழ்பவன் சென்ற ஜென்மத்தில் செய்திட்ட பாவங்களின்

பலன் இந்த ஜென்மத்தில் அவனை பாதிக்கின்றது என்கிறார் வள்ளுவர்.


 எனவே நான் உங்கள் அனைவருக்கும் கூறிடும் கருத்து என்னவென்றால்

நாம்  இப்பிறவியில் புண்ணியங்களை செய்திட்டால் மறு ஜென்மமாவது

நலமுடன் வளமுடன் வாழ்ந்திடலாம் என்று வள்ளுவன் கூறிய கருத்தை

உங்கள் அனைவரின் சிந்தனைக்கு விருந்தாக படைக்கிறேன்.வாழ்வோம்

வளமுடன்.நன்றி வணக்கம்.மதுரை T.R.பாலு.மீண்டும் அடுத்த குறள்

விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே!!




                     

No comments:

Post a Comment