Friday, March 8, 2013

திருக்குறள் தெளிவுரை !!

தினம் ஒரு திருக்குறள் !! 

                                        அதிகாரம் :-       ஊடலுவகை.

                                           குறள் எண்:-    1330.

 

      "  ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் 

             கூடி முயக்கப் பெறின் .. .. .. .. .. .. .. .. .. .. .. 

 

          காமம் என்று சொல்லப் படும் இருபாலர்களுக்கு இடையே ஏற்படும் அந்த உணர்வுக்கு இன்பம் தருவது எது என்று கேட்டால் தலைவன்  தலைவி இருவருக்கு இடையில் ஏற்படும் ஊடுதல் ஆகும். ஊடுதல் என்றால் சிறுசிறு பிரச்சனைகளுடன் ஒருவருக்கு  ஒருவர் ஏற்படும் ஆசை உணர்வுகள் யாவையும் உள்ளடக்கி சீண்டிப் பார்த்தாலே ஆகும். இது இரவுவரை நீடிக்கும்.அந்த நிகழ்வுகள் அனைத்தும் முடிவுற்றபின் அந்த ஊடலுக்கு இன்பம் எது என்று வள்ளுவனிடம் கேட்கும் போது என்ன சொல்கிறார் என்றால் அதற்கு இன்பம் தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் இறுகக் கட்டித் தழுவுதலே ஆகுமாம். இது வள்ளுவன் சொன்ன கருத்து.   மீண்டும் நாளை வேறு ஒரு திருக்குறள் தெளிவுரையில் சந்திப்போமா  நேயர்களே! நன்றி! வணக்கம்!!   


No comments:

Post a Comment