Saturday, March 2, 2013

திருக்குறள் விளக்கம் !!

தினம் ஒரு திருக்குறள்  


அனைவருக்கும் வணக்கம். இன்று நான் தரும் குறளும் அதன் விளக்கமும்:-


                          அதிகாரம் :-   புறங்கூறாமை 

                           குறள் எண் :- 133.

         புறங்கூறிப் [பொய்த்துயிர் வாழ்தனின் சாதல் 

          அறங்கூறும் ஆக்கம் தரும் .. .. .. .. .. .. .. .. .. .. .. .


ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் இல்லாததும் பொல்லாததும் கூறி 

அவர் தரும் காசைப் பெற்று உண்டு உயிர்வாழ்தலை விட அதனால் 

வறுமையுற்று உயிரை விட்டு விடுதல் சாலச் சிறந்ததாகும்.  அது 

மட்டும் அல்ல. அது அற நூல்கள் நமக்கு அருளிய ஆக்கத்தையும் 

தரும் என்று வள்ளுவப் பெருந்தகை நமக்கு கூறியுள்ளார். நாமும் 

அதனை நமது வாழ்வினில் கடைபிடிப்போமா நேயர்களே! நன்றி.

வணக்கம். அன்புடன் மதுரை  T.R.பாலு.

 























  


  


No comments:

Post a Comment