தினம் ஒரு திருக்குறள் !!
அதிகாரம் : - காதற் சிறப்புரைத்தல்.
குறள் எண் : - 1 1 2 2.
" உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு ".. .. .. .. .. ..
குறள் விளக்கம்:- இந்த மடந்தையோடு (பெண்ணோடு) எனக்கு உள்ள நட்பு முறைகள் தொடர்புகள் எப்படி உள்ளது என்று கேட்டால் எனது இந்த உடம்பிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்புகள் எந்த தன்மையானவைகளோ அதற்கு இணையான அதே தன்மையானவைகள் என்றுதான் என்னால் சொல்ல முடிகிறது என்று வள்ளுவர் அருளிச் சென்ற கருத்து விளக்கத்தில்தான் காதலுக்கு எவ்வளவு சிறப்புகளை அவர் அளித்து உள்ளார் என்பது நமக்குப் புலப்படுகிறது.
மீண்டும் நாளை சந்திப்போமா அடுத்த குறள் விளக்க தொகுப்பினில். நன்றி!வணக்கம் !! அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment