Friday, March 15, 2013

தோல்வி அடைந்தவரே வெற்றி பெற்றவர் !!

தினம் ஒரு திருக்குறள் 




 அதிகாரம் :- ஊடலுவகை.


 குறள் எண்:- 1 3 2 7 .



ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் காணப் படும்.  .. .. .. .. .. .. 



எங்கேயாவது நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இல்லை யாராச்சும் சொல்லித்தான் இருக்காங்களா? எதை?
அட அதாங்க நம்ம வான் புகழ் வள்ளுவர் மேலேசொன்ன குறளில் சொன்னதுபோல தோத்தவங்களை ஜெயித்தவங்க என்று.

கணவன் மனைவி இவங்க இருவருக்குள் வரும்விவாதங்களில் சச்சரவுகளில் (இதற்கு பெயர் “ஊடல்”) கணவன் மனைவியுடன் மோதவிரும்பாமல் சரி சரி
நீ சொல்ற மாதிரியே நான் நடந்துக்கிறேன் என தோல்வியை ஒத்துக்கொள்கிறான் என வைத்துகொள்வோம்.

அவன் ஜெயித்து விடுகிறான்.   அதன் பிறகு இரவில் இருவருக்கும் இடையில் ஏற்படும் கூடலில் உறவின் பிணைப்பில் கணவன் முதலில் இன்பத்தை அடைகிறான் அல்லவா? ஆகவே கணவன் தான் வெற்றி பெறுகிறான்.
பகலில்  தோல்வியை ஒப்புகொண்டாலும் கூட இரவில் ஏற்படும் உறவில் விளையும் சுகத்தை பெறுவதில் முதல் இடத்தை பிடிப்பதன் மூலம் அவனே வெற்றிபெறுகிறான்  என்பதனை வள்ளுவ பெருந்தகை எவ்வளவு நேர்த்தியாக நாசூக்காக  சொல்லி உள்ளார்என்பதனை  படித்து ரசியுங்கள் நேயர்களே.நன்றி வணக்கம்.


No comments:

Post a Comment