Friday, March 1, 2013

திருக்குறள் விளக்கம் !!

தினம் ஒரு திருக்குறள் !!        




                        அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.  இன்றைய தினம் நான் 

உங்கள் சிந்தனைக்கு தரும் குறளும் அதன் விளக்கமும்:-



                                    "  பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 

                                        அணியுமாம் தன்னை வியந்து !! " .. .. .. .. .. .. 

                                                    (அதிகாரம்: பெருமை.. குறள் எண்.978)


                         பெரும் புகழ் உடையவர்களும் நல்ல பண்பு உடையவர்களும் 

எப்போதும் பணிவுடன் மட்டுமே இருப்பார்கள். ஆனால் சிறு மதி படைத்த 

நபர்கள் எப்பொழுதும்தன்னை தானே பாராட்டிக்கொண்டும் தன்னால் மட்டுமே  

எல்லா காரியங்களும் நடப்பதாகவும் பிதற்றிக் கொண்டு இருப்பார்கள்.ஆகவே 

நாம் அனைவரும் இனிமுதல் கொண்டாவது வாழ்வில் பணிவுடன் நடந்து 

பெரும் புகழும் நற்பண்பு உடையோர்களாகவும் மாறிட முயலுவோமாக! 

நன்றிவணக்கம்மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே 






No comments:

Post a Comment