Thursday, March 7, 2013

திருக்குறள் தெளிவுரை!!

தினம் ஒரு திருக்குறள்!!

         தினம் ஒரு திருக்குறள் பதிவுகளில் உங்கள் அனைவரையும் காண்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய நான் தரும் குறளும் அதன் விளக்கமும் என்னவென்றால் :-

                                             அதிகாரம் : குறிப்பறிதல்  

                                                         குறள் எண்   :  1094.  

 

       " யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 

           தான்நோக்கி மெல்ல நகும் " .. .. .. .. .. 

 

 பொருள்:-  எனது உள்ளம் கவர்ந்த அன்புக் காதலி எப்படிப்பட்டவள் எனில் நான் அவளை பார்க்கும்போது ஏதும் அறியாதவள் போல என்னை சற்றும் புரியாதவள் போல நிலத்தைப் பார்த்திடுவாள். ஆனால் அதே சமயம் நான் அவளை பார்த்திடாமல் இருக்கும்போது அவள் நிலைமை எப்படி இருக்கும் தெரியுமா என்னை பார்த்து  தனது மனதுக்குள் அவள் மெல்ல மகிழ்ந்து கொள்வாளாம் என வான் புகழ்வள்ளுவர் பெருந்தககை  கூறிச்சென்ற குறள் "அந்தக்கால பெண்களுக்குரிய "குணமாக இருந்து உள்ளது என்பதனை அறியும்போது மனம் என்னே மகிழ்வுறுகிறது.

மீண்டும் அடுத்த  குறள் விளக்கத்தில் சிந்திப்போம் நேயர்களே. நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.      

    

  

No comments:

Post a Comment