திருக்குறள்
இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். இன்று நான்
உங்கள் அனைவருக்கும் தரும் குறள் மற்று அதன் விளக்கம் யாதெனின்:-
அதிகாரம் :- ஊழ்
குறள் எண்;- 380.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான் முந்துறும்,, ,, ,, ,, ,, ,, , , ,, ,,, ,
விளக்கம்:-
ஊழைவிட மிகவும் வலிமை உள்ளது வேறு எதுவம் கிடையாது.
ஊழை விலக்கஅதனைஒதுக்கிவிட்டுமற்றும்ஒருவழிதனை நாம் தேடினாலும்
கூட அங்கேயும் ஊழ் தானாக வந்து முன் நிற்கும்இது வள்ளுவனின் வாக்கு
இங்கே ஊழ் என்று நாம் குறிப்பிடுவது எது என்றால் முன்ஜென்ம வினைப்
பயன் என்பதாக அறிக. அதாவது விதியை வெல்ல இயலாது என்பதே நமக்கு
வான்புகழ் வள்ளுவன் அருளிச்சென்ற மையக் கருத்து.மீண்டும் நாளை நாம்
வேறு ஒரு குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே.நன்றி.வணக்கம்.
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment