நட்பு என்றால் என்ன ?
தினம் ஒரு திருக்குறள் !!
அதிகாரம் :- நட்பு
குறள் எண்:- 186.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு ..........................
பொருள் விளக்கம்:- முகம் மட்டும் மலரும்படியாக தமது நண்பரிடம் நட்பு பாராட்டுவது நட்புக்கு இலக்கணம் ஆகாது. ஆனால் நாம் நமது நண்பரிடம் காட்டிடும் நட்பு வெளிப்பாடு, அதனால் விளைந்திடும் நல்ல நன்மைகள் அவரது நெஞ்சத்தை தொடும்படியாக அமைந்திடவேண்டும் அது ஒன்று தான் தூய நட்பின் இலக்கணம் என்று திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற உண்மைதனை நாம் இதுவரை கடைபிடிக்காவிட்டாலும் இனிமேலாவது கடைபிடித்து நண்பர்களுக்கு உண்மையுடன் வாழ்ந்திட முடிவெடுத்து செயல்படுத்துவோம்உலகத்தில் . மீண்டும் நாளை அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போமா நேயர்களே!
நன்றி வணக்கம். அன்பன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment