Monday, March 11, 2013

நல்ல ஒழுக்கம் என்றும் நன்மை தருபவையே !!

தினம் ஒரு திருக்குறள்!!  



                          அதிகாரம் :-  ஒழுக்கமுடைமை 

                            குறள் எண்:-  134.


மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான் 

பிறப்பொழுக்கல் குன்றக் கெடும்.. .. .. .. .. .. .. ..



தான் கற்று உணர்ந்த வேதங்களையும் அதன் 

உண்மைப் பொருள்களையும் மறந்தாலும் கவலை 

கொள்ள வேண்டியதில்லை. ஏன் என்றால் அவை

அனைத்தையும் மீண்டும் ஓதிக் கற்றுக்கொள்ள 

அந்தணர்கள் என்று அழைக்கப்படும் பார்ப்பனர்-

-களால் முடியும்.  ஆனால் அதே சமயம் அவர்கள் 

(வேதம்/மறை ஒதிடுபவர்கள் என்றுஅழைக்கப்படும் 

அந்தணர்கள்) குடிப்பிறப்பு ஒழுக்கம் நேர்மை 

நிறைந்த அவர்களது வாழ்க்கை,உண்மையான 

அந்தணர்களதுநடவடிக்கைஇவைகளில் எது ஒன்று 

குன்றினாலும் குறைந்தாலும் மறைந்தாலும் 

அது கெட்டுப் போனதாக மட்டுமே கருதப்படும்.

மீண்டும் அதனை சரிசெய்திட இயலாது என்று 

வள்ளுவர் சொன்ன கருத்தினை அந்தணர்கள் 

அனைவரும் ஆராய்ந்து வாழ்வில் கடைப்பிடித்து 

ஒழுகிட வேண்டுமாய் கேட்டுகொள்ளப் படுகி-

றார்கள்.

நன்றி! வணக்கம்!!

No comments:

Post a Comment