சன்னியாசியாகப் போகலாமா? அல்லது சாமியாராக ஆகலாமா?
தெய்வப்புலவர் திருவள்ளுவர் மானுடத்துக்குச்
சொல்லிச்சென்றகருத்துக்களும் அறிவுரைகளும் ஏராளம்.ஏராளம். அவற்றுள் ஒன்றுதான்நான் மேலே சொன்னது.
திருவள்ளுவப் பெருந்தகையை சந்தித்த ஒருவர்
தமக்கு வாழ்க்கை முழுவதும் ஒரே பிரச்சனையாக உள்ளது.
பேசாமல் சந்நியாசியாக போகலாமா அல்லது சாமியாராக ஆகலாமா என கேட்கும் போது அவர் சொன்னகருத்து கீழேயுள்ள குறளிலும் அதன்
விளக்கத்திலும் தரப்பட்டுள்ளது.
அதிகாரம் :- கூடா ஒழுக்கம்.
குறள் எண் :- 280.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.. .. .. .. .. .. .. ..
விளக்கம்:- இந்த உலகம் பழிக்ககூடிய செயல்களான பிறரை ஏமாற்றுவது
திருடறது பொய் சொல்றது அடுத்தவன் காசுக்கு ஆசை படுவது நம்பிக்கை துரோகம் செய்வது இதுபோல இன்னும் பற்பல குறிப்பிட முடியாத
பாவ செயல்களை செய்யாமல் இருந்தாலே போதுமானது
.(ஆனால் இந்த காலத்திலே இதை எல்லாம் செய்பவர்கள் மிக நல்ல நிலைமையில் இருக்காங்க அது வேற விஷயம்).
நீ மொட்டை அடிச்சு சந்நியாசியாகவும் ஆக வேண்டாம் தாடி வளர்த்து
சாமியாராகவும் போக வேண்டாம் என வான்புகழ் வள்ளுவர் கூறிய
கருத்து மனிதகுலத்துக்கு என்றும் பயன்தரும் என்பதில்
சந்தேகமேயில்லை.
மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் நாம் அனைவரும் சந்திப்போம்
.அதுவரை உங்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி
விடைபெறுகின்றேன்.வணக்கம்.அன்பன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment