தினம் ஒரு திருக்குறள்
அனைவருக்கும் வணக்கம். இன்றைய தினம் நான் உங்கள் அனைவருக்கும்
தரும் குறளும் அதன் விளக்கமும் என்னவென்றால்:-
அதிகாரம் :- வரைவின் மகளிர்
குறள் எண் :- 92௦
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.. .. .. .. .. .. .. .. ..
இருவகைப்பட்ட மனம் கொண்டுள்ள பொது மகளிரும் (அன்னியப் பெண்கள்.
விலைமகளிர்) நல்லவனையும் பொல்லாதவனாக கள்வனாக மாற்றம்
செய்திடும் கள் என்று சொல்லப்படும் மதுவும் கவறுதல் என்று சொல்லும்
சூதாட்டமும் ஆக இந்த மூன்றும் திருமகள் என்று அழைக்கப்படும் லட்சுமி
தேவியால் ஒதுக்கப்பட்ட நிராகரிக்கப்பட்ட நீக்கப்பட்ட நபர்களின் முக்கிய
உறவாகும். இது வள்ளுவன் நமக்கு சொன்ன அறிவுரை.
எனவே நாம் அனைவரும் மேலேசொன்ன நம்மை செல்வத்துடன் உள்ள
தொடர்புகளை வேர் அறுக்கும் இந்த மூன்று விஷயங்களிலும் நாம் மிகவும்
எச்சரிக்கையுடன் இருந்து அவற்றுடன் சேர்ந்திடாமல் வாழ்ந்திடல் மிகவும்
முக்கியமானது என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment