தினம் ஒரு திருக்குறள் !!
அனைவருக்கும் வணக்கம்.
இன்று நான் தினம் ஒரு திருக்குறள் மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
உலக பொதுமறையான நூல் நம் தெய்வ புலவர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நூல் அதுவே.
படிக்கவேண்டியது தமிழன் ஆகிய நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.
பொதுவா தமிழில் ஒரு சொல் வழக்கு உண்டு என்னன்னா உள்ளூர் மாடு விலைபோகாது என.
மதுரையில் வசிக்கும் எத்தனைபேர் திருமலை நாயக்கர் கட்டிய மஹால் பார்த்திருப்பாங்க?
அதுபோல குற்றாலத்தில் வசிக்கும் எல்லோருமா அருவியில் குளிப்பாங்க?இல்லைங்க. அதுபோலத்தான் தமிழன் எல்லோரும் திருக்குறள் படிப்பது இல்லை. இனிமேலாவது நாம அந்தமாதிரி இல்லாம இருக்கணும்னு உங்க எல்லோரயும் நான் கேட்டுக்கிறேன்
-
அதிகாரம் :- வலியறிதல்
குறள் எண் :-478.
ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை
பொருள் :-நமதுவருமானம் அதன் அளவு மிகச் சிறியதான அளவாக இருந்தாலும் நமக்கு எந்த கேடும்/தீமையும் வந்து விடாது.எப்போது ?நமது செலவுகளை வருகின்ற வருமானதிற்குள் வைத்துக்கொள்ளும்போது !
அதனாலே நாம எல்லோரும் வரவுக்குள் செலவை வைத்துகொள்வோம் என திருக்குறள் மேல உறுதி எடுத்துக் கொள்வோம்
நன்றி !வணக்கம் !!
மதுரை T.R.பாலு. மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் சந்திப்போம் ! சிந்திப்போம்.!!
No comments:
Post a Comment