சொல்லுவது எளிது! ஆனால்..............செயல் ? ? ?
தினம் ஒரு திருக்குறள் !!
அதிகாரம் :- வினைத் திட்பம்.
குறள் எண் :- 664.
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல் ........ .......
பொதுவாக எந்த ஒரு செயலையும் இதனை இப்படி செய்திருக்கலாம் அதனை அப்படி செய்திருக்கலாம் நான் என்றால் இன்னும் உன்னைவிட சிறப்பாக செய்திருப்பேன்.இவ்வாறு எல்லாம் சொல்றது என்பது நாம் அனைவருக்கும் மிக எளிதான ஒன்று. ஆனால் அரிதானது எது என்றால் மிகவும் கஷ்டமானது எது என்று கேட்டால் அதுபோல செய்து முடிப்பது என்று வள்ளுவர் சொல்லி உள்ளார். ஆகவே நாமும் இனிமேல் நம்மால் எதை செய்ய முடியுமோ அதை மட்டுமே சொல்வோம். எதை சொல்லு கிறோமோ அதை மட்டுமே செய்வோம் என்று சொல்லி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment