Sunday, September 7, 2014

துறவு வாழ்க்கையைவிடவும் மேன்மையான வாழ்க்கை ஒன்று உண்டு !! வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  இல்வாழ்க்கை.



குறள் எண் :- 48.




ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை 


நோற்பாரின் நோன்மை உடைத்து... ... ... 



விளக்கம் :-  தானும் அறநெறியில் பிறளாது 


வாழ்ந்து, தன்னைச் சேர்ந்தோரையும் அதில் 


ஈடுபடுத்தும் ஒருவரது இல்வாழ்க்கை, தவசிகள் 


வாழ்ந்துவரும் துறவு வாழ்க்கையைவிடவும் 


மிக மேன்மையானது. இது வான்புகழ் வள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும். 

No comments:

Post a Comment