துறவு வாழ்க்கையைவிடவும் மேன்மையான வாழ்க்கை ஒன்று உண்டு !! வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- இல்வாழ்க்கை.
குறள் எண் :- 48.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து... ... ...
விளக்கம் :- தானும் அறநெறியில் பிறளாது
வாழ்ந்து, தன்னைச் சேர்ந்தோரையும் அதில்
ஈடுபடுத்தும் ஒருவரது இல்வாழ்க்கை, தவசிகள்
வாழ்ந்துவரும் துறவு வாழ்க்கையைவிடவும்
மிக மேன்மையானது. இது வான்புகழ் வள்ளுவர்
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
No comments:
Post a Comment