Sunday, February 22, 2015
நட்பு என்றால் எப்படி இருக்க முடியும் ? இருக்க வேண்டும் ?திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
விளக்கம் :- ஆடை நமது உடலைவிட்டு சரியும்
இது ஏன்னா அண்ணே
உடுக்கையை இழந்தாலும் நட்பிற்கு உதவினால்
சொல்லுங்க
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் திருமலை.இரா. பாலு.
Friday, February 6, 2015
(மனைவியைத்தவிர) பிற பெண்கள், விலைமாதர்களின் தோள்களை யார் தழுவுவார்கள் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- வரைவின் மகளிர்.
குறள் எண் :- 917.
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின்
பேணிப் புணர்பவர் தோள்... ... ...
விளக்கம்:-நெஞ்சில்பொருளைமட்டுமே எண்ணி
உடலால் கட்டித் தழுவும் விளைமாதர்களது
தோள்களை, நிறைகுணம் அற்ற நெஞ்சம்
உள்ளவரே பற்றிக்கொள்வார்.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
ரெங்கநாயகி :- ஏண்டி சரசு,நம்மபண்ணைப்புரம்
ஜமீந்தார் பரஞ்சோதி, இப்ப எல்லாம் உன்னையத்
தேடி இங்கே வர்றதே இல்லையே. ஏண்டி ?
சரசு :- ஏன் ரெங்கநாயகி அக்கா. அவன் என்ன
என்னையத் தொட்டுத் தாலி கட்டிய புருசனா
என்ன ? இங்கேயே வந்து கிடக்க. எனக்கு
வேண்டியதெல்லாம் அவர்கிட்ட இருக்கிற
பணமும் நகை நட்டும் மட்டும் தான். எந்தப்
பணக்காரப்பய முன்னாலும் நான் நின்னேன்னு
சொன்னா அவன் எனக்கு அடிமை. ஏன்னா
என்னோட அழகு அப்படியாக்கும் !!
ரெங்க:- அட.. பரவாயில்லையே சரசு. நான்
என்னவோ உன்னைய வெறும் கத்துக்குட்டி
அப்படீன்னுதான் நினைச்சேன். நீ பரீட்சையிலே
பாஸ் பண்ணிட்டடி. அறிவு, தன்மானம்,சூடு,
சொரணை,மானம்,வெட்கம் இல்லாத மடப்பய
மவனுக தானே நம்ம காலடியே கதின்னு
கிடப்பானுக. சரி விடுரி. அடுத்த வலுவான
ஆளைக்கணக்கு பண்ணுடி சீக்கிரமாடி. நான்
வரட்டுமா சரசு.
சரசு சரசுதான்.
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு
பெறுகிறது. மீண்டும் நாளை சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
மதுரை T.R. பாலு.
Thursday, February 5, 2015
பயனில்லாத சொற்களைப் பேசாதீர்கள் !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பயன் இல சொல்லாமை.
குறள் எண்:- 2௦௦.
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்... ... ...
விளக்கம் :- பயன்தரும் சொற்களை மட்டுமே
சொல்லிட வேண்டும். பயன் தராத சொற்களை
ஒருபோதும் பேசிடவே கூடாது. இது வள்ளுவர்
நமக்கு அருளிச்சென்ற குறளும் விளக்கமும்
ஆகும்.
நமது நாட்டு விளக்கம் :-
ராம்ராஜ் :- என்னடா தங்கராஜ். அப்ப்புறம்
இடைத்தேர்தல் என்ன சொல்லுது ? ஸ்ரீரங்கம்
தேர்தலில் யார்டா ஜெயிப்பாங்க ?
தங்கராஜ் :- அண்ணே !! உங்க கேள்வியே
சரியில்லையே !!இதிலென்ன சந்தேகம்
உங்களுக்கு ? ஓட்டுக்காக லஞ்சம் பல
உருவத்துலே எல்லா இடத்திலும் வழங்கிடப்
படுகிறது. இலவசமாக வாக்காளர்களுக்கு
வேட்டி, சேலை, ரொக்கப்பணம்,
காலை உணவு, மதியம் சாப்பாடு, மாலை
டிபன், இரவு விருந்து, (பிரியாணி,மது) அப்படி
இப்படீன்னு கண்டமேனிக்கு ஆளும்கட்சி
காவிரித்தண்ணி போல பணத்தை
செலவழிக்கும் நிலையிலே, வேற யார்ணே
ஜெயிப்பாங்க ?நிச்சயம் ( அ.இ.அ.தி.மு.க.)
அயோக்கிய இளிச்சவாய்,அறிவுகெட்ட
திருட்டு முட்டாள்கள் கட்சிதான் ஜெயிக்கும்.
ராம்ராஜ் :- இல்லடா தம்பி நான் என்ன
சொல்றேன்னா...........................................................
தங்க :- அண்ணே. வள்ளுவர் என்ன
சொல்லியிருக்காரு?
பயன் உள்ளதை மட்டும் பேசுங்க. பயன் இல்லாத
சொற்களைப் பேச வேண்டாம்னு
சொல்லியிருக்கார்.
அதனால வேற பேச்சு வேண்டாம். எனக்கு நேரம்
ஆச்சு. நான் வாறன்.
இத்துடன் நமது நாட்டு விளக்கம்
முடிவடைகிறது.
மீண்டும் நாளை சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை. இரா. பாலு.
(மதுரை T.R. பாலு)
Subscribe to:
Posts (Atom)