Thursday, February 5, 2015

பயனில்லாத சொற்களைப் பேசாதீர்கள் !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  பயன் இல சொல்லாமை.



குறள் எண்:-  2௦௦.



சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 

சொல்லிற் பயனிலாச் சொல்... ... ... 


விளக்கம் :-   பயன்தரும் சொற்களை மட்டுமே 

சொல்லிட வேண்டும். பயன் தராத சொற்களை 

ஒருபோதும் பேசிடவே கூடாது. இது வள்ளுவர் 

நமக்கு அருளிச்சென்ற குறளும் விளக்கமும் 

ஆகும்.



நமது நாட்டு விளக்கம் :-


ராம்ராஜ் :-  என்னடா தங்கராஜ். அப்ப்புறம் 

இடைத்தேர்தல் என்ன சொல்லுது ? ஸ்ரீரங்கம் 

தேர்தலில் யார்டா ஜெயிப்பாங்க ?

தங்கராஜ் :-  அண்ணே !! உங்க கேள்வியே 

சரியில்லையே !!இதிலென்ன சந்தேகம் 

உங்களுக்கு ? ஓட்டுக்காக லஞ்சம் பல 

உருவத்துலே எல்லா இடத்திலும் வழங்கிடப் 

படுகிறது. இலவசமாக வாக்காளர்களுக்கு 

வேட்டி, சேலை, ரொக்கப்பணம்,

காலை உணவு, மதியம் சாப்பாடு, மாலை 

டிபன், இரவு விருந்து, (பிரியாணி,மது) அப்படி 

இப்படீன்னு கண்டமேனிக்கு ஆளும்கட்சி 

காவிரித்தண்ணி போல பணத்தை 

செலவழிக்கும் நிலையிலே, வேற யார்ணே 

ஜெயிப்பாங்க ?நிச்சயம் ( அ.இ.அ.தி.மு.க.)

அயோக்கிய இளிச்சவாய்,அறிவுகெட்ட 

திருட்டு முட்டாள்கள் கட்சிதான் ஜெயிக்கும்.


ராம்ராஜ் :-  இல்லடா தம்பி நான் என்ன 

சொல்றேன்னா........................................................... 

தங்க :- அண்ணே. வள்ளுவர் என்ன 

சொல்லியிருக்காரு?

பயன் உள்ளதை மட்டும் பேசுங்க. பயன் இல்லாத 

சொற்களைப் பேச வேண்டாம்னு 

சொல்லியிருக்கார்.

அதனால வேற பேச்சு வேண்டாம். எனக்கு நேரம் 

ஆச்சு. நான் வாறன்.


இத்துடன் நமது நாட்டு விளக்கம் 

முடிவடைகிறது.


மீண்டும் நாளை சந்திப்போம்.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.


(மதுரை T.R. பாலு)

No comments:

Post a Comment