Friday, February 6, 2015

(மனைவியைத்தவிர) பிற பெண்கள், விலைமாதர்களின் தோள்களை யார் தழுவுவார்கள் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண் :-  917.



நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின் 


பேணிப் புணர்பவர் தோள்... ... ... 



விளக்கம்:-நெஞ்சில்பொருளைமட்டுமே எண்ணி 

உடலால் கட்டித் தழுவும் விளைமாதர்களது 

தோள்களை, நிறைகுணம் அற்ற நெஞ்சம் 

உள்ளவரே பற்றிக்கொள்வார். 

இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



ரெங்கநாயகி :-  ஏண்டி சரசு,நம்மபண்ணைப்புரம் 

ஜமீந்தார் பரஞ்சோதி, இப்ப எல்லாம் உன்னையத்

தேடி இங்கே வர்றதே இல்லையே. ஏண்டி ?


சரசு :-  ஏன் ரெங்கநாயகி அக்கா. அவன் என்ன 

என்னையத் தொட்டுத் தாலி கட்டிய புருசனா 

என்ன ? இங்கேயே வந்து கிடக்க. எனக்கு 

வேண்டியதெல்லாம் அவர்கிட்ட இருக்கிற 

பணமும் நகை நட்டும் மட்டும் தான். எந்தப் 

பணக்காரப்பய முன்னாலும் நான் நின்னேன்னு 

சொன்னா அவன் எனக்கு அடிமை. ஏன்னா 

என்னோட அழகு அப்படியாக்கும் !!


ரெங்க:- அட.. பரவாயில்லையே சரசு. நான் 

என்னவோ உன்னைய வெறும் கத்துக்குட்டி 

அப்படீன்னுதான் நினைச்சேன். நீ பரீட்சையிலே 

பாஸ் பண்ணிட்டடி. அறிவு, தன்மானம்,சூடு,

சொரணை,மானம்,வெட்கம் இல்லாத மடப்பய 

மவனுக தானே நம்ம காலடியே கதின்னு 

கிடப்பானுக.  சரி விடுரி. அடுத்த வலுவான 

ஆளைக்கணக்கு பண்ணுடி சீக்கிரமாடி. நான் 

வரட்டுமா சரசு. 


சரசு சரசுதான்.


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 

பெறுகிறது. மீண்டும் நாளை சந்திப்போம்.


நன்றி !!   வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா.பாலு.



மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment