Sunday, February 22, 2015

நட்பு என்றால் எப்படி இருக்க முடியும் ? இருக்க வேண்டும் ?திருவள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  நட்பு.



குறள் எண்  :-  78.



உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே 

இடுக்கண் களைவதாம் நட்பு... ... ... 


விளக்கம்  :-  ஆடை நமது உடலைவிட்டு சரியும் 

போது எவ்வளவு விரைவாக நம் கை அங்கே 

செல்கிறதோ அது போல நண்பன் சிரமம் 

அடைந்திடும் பொது உடனே சென்று அங்கே 

அவனுக்குத் தேவையானதைத் தருவதே 

நல்ல நட்பின் அடையாளம் ஆகும். இது 

திருவள்ளுவன் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


ராம்ராஜு :- தம்பி சோம்ராஜூ  எங்கே நம்ம 

தம்பி நட்ராஜூவை காணோம். நீ கண்டா 

பாத்தியாலே.

சோம்ராசு :-  அண்ணே உனக்கு விசயமே 

தெரியாதா அண்ணே.

ராம்ராஜு:-  சொல்லுலே சொன்னாத்தானேலே 

எனக்கு விளங்கும். என்னாலே நடந்துச்சு ?

சோம்:-  அண்ணே அவன் தங்கச்சி கல்யாணம் 

போன வருஷம் நடந்துச்சுல்லே.

ராம் :-  ஆமா. அதுக்கு என்னாலே இப்போ ?

சோம்:-  அப்போது அவன் நம்ம கந்துவட்டி 

கணேசன்கிட்டே 5 லட்சம் வீட்டை அடகு 

வச்சு வாங்கிருக்கான். அத சொன்னமாதிரி 

பயலாலே திருப்பித் தர முடியலே. அதாலே 

ராம் :- அதாலே ? என்னாலே நடந்துச்சு ?

சோம :- ஏன்னா நடந்துச்சா ? கணேசன் இவன 

கோர்ட்லே போட்டு வீட்டை ஏலத்துக்குகொண்டு 

வந்துட்டான். உடனே நம்ம நட்ராஜூ இல்ல 

அவன் பணத்தோட வந்து வட்டியும் முதலுமா 

கந்துவட்டி கணேசன் கிட்டே கொடுத்து வீட்டை 

மீட்டிருக்கான். அதான் நடராஜை காணலை.

பாத்தியா அண்ணே நட்ராஜூ எப்படி வள்ளுவர் 

சொன்ன மாதிரி உதவியிருக்கான். இவன் தானே 

உண்மையான நண்பன். என்ன நான் சொல்றது ?

ராம் :-  தம்பி நீ சொல்றதுஉண்மைதான்டா.ஆனா 

இந்தக்காலத்துலே இப்படி உடனே ஓடிவந்து 

உதவி செய்ய யார்லே இருக்கா ?

சோம்: அண்ணே யாருமே இல்லை அண்ணே.

சரி அண்ணே நான் மதுரை பாலு சாரை போயி 

பாத்துட்டு வந்துடுறேன்.

பாலு :- வாங்க தம்பி சோம்ராஜூ என்ன இந்தப்

பக்கம் அத்தி பூத்தாப்புலே.

சோம்:- இல்ல அண்ணே. ( கந்துவட்டி கணேசன் 

கிட்டே ராம்ராஜூ மாட்டின கதைய சொல்றான்)

பாலு :-  தம்பி கேட்கவே சந்தோசம் தம்பி.

ஆனா இந்தக் காலத்துலே நண்பனுக்கு நாம 

உதவினோம்னு வச்சுக்க நம்ம நிலைமை நான் 

எழுதின இந்த " காலக்குறள் " மாதிரித்தான்

தம்பி அமைஞ்சுடும்.

சோம் :- அது  என்ன அண்ணே காலக்குறளா ? 

இது ஏன்னா அண்ணே 

புதுசா இருக்கு ? நீங்களே எழுதினீங்களா ? அத்த 

கொஞ்சம் சொல்லுங்க அண்ணே !!

பாலு : கேட்டுக்குங்க தம்பி:-


உடுக்கையை இழந்தாலும் நட்பிற்கு உதவினால் 

இடுக்கண் வருவது உறுதி... .... .... 


பாலு :- என்னதம்பிவாய்அடைச்சுப்போயிட்டீங்க 

இந்தக்குறள் எப்படி இருக்கு ? நீங்களே 


சொல்லுங்க 



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா. பாலு.



( மதுரை TR. பாலு )

No comments:

Post a Comment