Thursday, March 26, 2015

பெண்களின் மனமே இப்படித்தான் சந்தேகம் கொண்டது !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள் 


அதிகாரம் :-  புலவி நுணுக்கம்.


குறள் என்ன :- 1319.




தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் 

இந்நீரர் ஆகுதிர் என்று... ... ... 



விளக்கம் :-   அவளது (காதலியின்) உடலைநீக்கி 


அவளை மகிழ்வித்திட்ட போதிலும், அவர், 


(காதலன்)  இதுபோலத்தானே 


இவர், இன்னொரு பெண்ணையும் உடலைநீக்கி 


மகிழ்வித்திருப்பார் என்று நினைத்து என்னிடம் 


அவள் சினம் கொள்வாள். இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-



கவிதா :-  என்ன விஜயா !! எப்பிடிடி இருக்கே ?

அதான் நீ நினைத்தவனே உனக்கு கணவன் 

ஆகிட்டானே. அப்புறமும் ஏண்டி முகத்தை 

உம்முன்னு வச்சிக்கிட்டு இருக்கே ?

விஜயா :-  நீ சொன்னது என்னவோஉண்மைதான்.

நான் இல்லைன்னு சொல்லலே. ஆனா அவர் 

என்னை எப்படி காதல் வலையிலே வீழ்த்தி 

எனக்கு தேவையான சுகத்தை வாரி வாரி 

வழங்குகிறாரோ அதுபோலத்தானே அவர் 

இன்னொரு பெண்ணுக்கும் வழங்கி இருப்பார் ?

என்று நினைச்சுட்டு இருந்தேன். அதான் முகம் 

உம்ம்னு இருக்கு. சொல்லுடி கவிதா, நான் 

சொன்னதிலே தப்பு ஒன்னும் இல்லையே.


கவிதா :-  ஒரு தப்பும் கிடையவே  கிடையாது.

ஆனா ஒன்னு மட்டும் விஜயா நிச்சயம்.


விஜயா :-  அது என்னன்னு கேட்டாத்தான் 

சொல்லுவியாக்கும்.


கவிதா :-  இல்லடி, வெளியே போற ஆம்பிள 

தன்னோட வேட்டியை எங்கே கழட்டி 

வைக்கிறார்னு நம்மாலே வேவு பார்க்கவா 

முடியும். சரிதான்னு விட்டுத்தள்ளுடி.


இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் 

நிறைவு பெறுகிறது.


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா.பாலு.


( மதுரை T.R. பாலு )

No comments:

Post a Comment