நல்லவர்களுக்கு நன்மை செய்யாதவன் யார் ? ( மனைவியைக் கண்டு அஞ்சுபவனே ) வள்ளுவர் வகுத்த வழி இதுதான் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பெண் வழிச்சேறல்.
குறள் எண் :- 905.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்... ... ...
பொருள் :- மனைவியைக் கண்டு அஞ்சுகிறவன்
எப்போதும், நல்லவர்க்கு நல்லது செய்ய அஞ்சுவான்.வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நாட்டு நடப்பு விளக்கம் :-
ரமேசு :- என்ன தம்பி சுரேசு. நம்ம தே.மு.தி.க. யாரோட கூட்டணி அமைக்கும்னு நினைக்கிறே ?
சுரேசு :- அந்தக் கொடுமைய என்னத்த சொல்ல. அவருநல்லவர்தான்.
ரமேசு :- யாரு ? விஜயகாந்தா ?
சுரேசு :- ஆமா அவரேதான். அண்ணே அவரு அவரோட சம்சாரத்துக்கு ரொம்பவே பயப்படுறார் அப்டீன்னு நான் நினைக்கிறேன். அதாலேதான், அவரு திமுக காங்கிரஸ் அணியோட சேர முடியல. இத்தினிக்கும் அல்லா மாவட்ட
செயலாளர்கள் அத்தினி பெரும் சொல்றாங்க இந்தத்தேர்தலில் நாம திமுக வோட கூட்டு சேரலை என்று சொன்னால், பேசாம கட்சிய கலைச்சுரலாம் அப்டின்னு சொன்ன பிறவும் இந்த பிரேமலதா அம்மா என்னடான்னா
என்னென்னமோ பேசுகிட்டு திரியுது. அதாலே நான் என்ன சொல்றேன்னா விஜயகாந்த் அவரோட பொண்டாட்டிக்கு பயந்துகிட்டு இருக்கிரவரையிலும், நல்லவர்களோட
சேரவும் முடியாது நல்ல கூட்டணியிலே இணையவும் முடியாது. இவரு அரசியல்ல ஜெயிக்கவும் முடியாது.சரிதானே நான் சொல்றது.
ரமேசு :-ரொம்ப கரீட்டா சொன்ன தம்பி.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
No comments:
Post a Comment