யார் இனிமை நிறைந்த சொற்களையும் கேட்டவுடன் கொடுக்கும் குணத்தை உடையவனும் ஆவான் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- சுற்றம் தழால்.
குறள் எண் :- 525.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்... ... ... ...
பொருள் :- இனிமை நிறைந்த சொற்களையும்
கேட்டதைக் கொடுக்கும் பண்புடையவன் எவன் எனில் அவன் எராளமான சுற்றத்தினரால் சூழப்பட்டு இருப்பான். இது வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் அதன் பொருளும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
கன்னையா :- வாங்க தம்பி பொன்னையா. என்ன
நேத்து வீட்டுலே ஏகப்பட்ட கூட்டம் ஏதாவது
விசேஷமா ?
பொன்னையா :- அண்ணே. அதெல்லாம் ஒண்ணுமில்லை அண்ணே. ஊரிலே இருந்து என்னோட ஐந்தாவது அக்காவும் அத்தானும் குழந்தைகளும் எங்களோட வீட்டுக்கு வந்திருந்தாங்க. என் மருமகனுக்கு
நேத்து பொறந்த நாள். அதான் வீட்டுலே விருந்து
அப்டி,இப்டின்னு கொஞ்சம் கூட்டம். வேற ஒன்னும் இல்லை அண்ணே.
கன்னையா :- டேய்..தம்பி..உன்னை பாத்தா எனக்கு ரொம்ப பெருமையா இருக்குடா. இன்னைக்கு இம்புட்டு விலைவாசி இருக்குற இந்த காலத்துலேயும் சொந்த பந்தத்தை
விட்டுறாம அரவணைச்சு போற பாத்தியா அது
உண்மையிலேயே மனசுக்கு ரொம்பவே இதமா
இருக்குடாதம்பி.உம்..இந்தக்காலத்துலேயாருடா
தம்பி உன்னைய மாதிரி சொந்தத்தை கொண்டாடும் குணம் உள்ளவங்க இருக்காங்க. நீ நல்லா அன்பா பேசுறே. உன்கிட்டே இருக்குறத சொந்தக்காரங்க கேக்குறதை இல்லன்னு சொல்லாம கொடுக்குறே உன்னைய மாதிரி திருவள்ளுவர் காலத்துலேயும் ஆளுக இருந்திருக்கானுவ. அதால தான் அந்த
மனுசனும் இன்னைக்கு நம்ம மதுரை TR பாலு
சார் எடுத்துப் போட்டிருக்குற தினம் ஒரு திருக்குறள் பகுதியிலே ஒரு குறள் எழுதி இருக்காருடா தம்பி. எந்த சூழலிலும் இந்த குணத்தை மட்டும் நீ மாத்திக்கவே செய்யாதடா தம்பி. சரி. அண்ணே கொஞ்சம் டவுண் வரை போயி காய்கறி வாங்கிட்டு வாறன். மதினி காத்துட்டு இருப்பா. வரட்டடா தம்பி.
பொன்னையா :- சரிங்க அண்ணே சூதானமா
பாத்து போயிட்டு வாங்க அண்ணே. நன்றி அண்ணே.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
No comments:
Post a Comment