Saturday, June 28, 2014

காதலியின் அங்க அடையாளங்களைப் பற்றி வள்ளுவர் கூறுவது என்ன ?








தினம் ஒரு திருக்குறள்.




அதிகாரம்  :-  நலம் புனைந்துரைத்தல்.


குறள் எண் :-  1113.


முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் 

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு... ... ... ... ...


விளக்கம் :-  மூங்கில்போன்ற தோள்களை 


உடைய இவளுக்கு தளிரே மேனி, முத்தே பற்கள், 


இயற்கை மணமே மணம், வேல் போன்ற 


கண்கள்.  இது நமக்கு திருவள்ளுவர் அருளிய 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  




மங்கன் :-  என்னப்பா ரங்கா உனக்கு அனேகமா 


அடுத்த வாரம்  இந்நேரம் கல்யாணங்காட்சி 


எல்லாம் முடிஞ்சு இருக்கும். ஆமா தம்பு ரங்கா 


 தம்பதிகள் நீங்க தேன்நிலவுக்கு எங்க 


போப்போறதா உத்தேசம். ஆமா உனக்கு 


பொண்டாட்டியா வரப்போறவளை நீ பாத்தியா?


எப்படிப்பா இருப்பா ? நிறம் எப்படி ? உடம்பு 


எப்படி, உயரம் எப்படி ? நல்ல பேரழகியா ? 


சொல்றா தம்பி விவரமா !!


ரங்கா :-  அண்ணே !! எனக்குப் பொண்டாட்டியா 


வரப்போறவ பேரு வள்ளி நாயகி. 



 பேருக்கேத்தபடிநல்ல நாட்டுக்கட்டை. 


உருட்டுக்கட்டை மாதிரி 


உடம்பு, நிறம் என்னவோ மாநிறம்தான் 


இருந்தாலும் அவளுக்கு இருக்கு முத்துப்போல் 


பல்வரிசை, மூங்கிலைப் போன்ற தோள்கள், 


நல்ல இயற்கை கிராம மணம் பொண்ணு 


அப்டியே பாத்தீன்னு சொன்னால் அப்சரஸ்தான் 


அண்ணே.


மங்கன் :-  உம்...உனக்கு என்ன...கொடுத்து 


வச்சவன்.நீ சொல்றதைப்பாத்த அந்தக்காலத்து 


திருமதி. நடிகை K.R.விஜயா, சாவித்திரி, ஜமுனா 


இவங்க எல்லோருடனும் கூட்டி, அப்படியே 


ராஜசுலோச்சனாஇவங்களையும் சேத்துப் 


பிசைஞ்சு மாவிலே அச்சு வாத்தாப்புலே  


அப்படியே இருக்கும். சரி நான் இப்ப நான் 


பாத்-ரூம் போயிட்டு வாறன்.


நன்றி !! வணக்கம் !!



மதுரை TR பாலு.


No comments:

Post a Comment