Sunday, December 28, 2014
நல்லது செய்யாவிட்டாலும் தீமையை செய்யாமல் இருப்பதே நல்லது. வள்ளுவர் கருத்து !!
பெண்மை நயவாமை நன்று... ... ... ... ... ... ...
விளக்கம் :- ஒருவர் அறத்தினைச் செய்யாமல்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
கங்காதரன் :- என்ன தம்பி சுதாகரா, இப்ப நம்ம
பரணிதரன் அவன் வீட்டுலே வாடகைக்கு குடி
இருக்கிற கேரளா நாட்டு பெண் குட்டி சுகந்தியை
கணக்கு பண்ற வேலைய விட்டுட்டானாமில்ல.
உனக்கு சேதி தெரியுமா.
சுதாகரன் :- என்ன அண்ணே சொல்றீங்க. எனக்கு
இந்தவிசயமேதெரியாதே.விவரமாச்சொல்லுங்க
கங்காதரன் :- ஆமாண்டா தம்பி, நேத்து அவனை
நான் கடைத்தெருவிலே வச்சுப்பார்த்தேன்.அவன்
சரிதான் போ.சரி தம்பி. நான் வாறன்.
நன்றி !! விளக்கம் !!
அன்புடன். திருமலை இரா.பாலு.
Thursday, December 18, 2014
காலம் அறிந்து நாம் செயல்பட்டால் உலகையே வெல்லலாம் !! வள்ளுவர் காட்டிய வழி !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- காலம் அறிதல்.
குறள் எண் :- 484.
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்... ... ... ... ...
விளக்கம் :- ஏற்ற காலத்தை அறிந்து
ஏற்ற இடத்தில் ஒரு செயலை நாம்
செய்தால், இந்த உலகத்தையே பெற
நினைத்தாலும் பெற்று விடலாம். இது
வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்
சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
( மதுரை T.R. பாலு )
Tuesday, December 9, 2014
அரசன் மற்றும் அரசியிடம் இருக்கும் மந்திரிகள் எப்படி இருக்க வேண்டும் !! வள்ளுவர் காட்டிய வழி!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- மன்னரைச் சேர்ந்தொழுகல்.
குறள் :- 691.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.. ... ... ... ...
விளக்கம் :- மாறுபட்ட கருத்துடைய
மன்னருடன்/அரசருடன் தொடர்பு
உடையவர்கள் மிகவும் விலகாமலும்
மிகவும் நெருங்காமலும் குளிர்காய்பவர்
போல நடந்து கொள்ள வேண்டும். இது
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நாமும் அவர் சொன்ன வழிப்படியே நடப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா.பாலு.
( மதுரை T.R. பாலு )
Sunday, December 7, 2014
சிற்றறிவு எதனை நமக்கு உண்டாக்கித் தரும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- நிலையாமை.
குறள் எண் :- 331.
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை... ... ... ... ...
விளக்கம் :- நிலையில்லாதவைகளை
நிலையானவை என்று எண்ணி மயங்கும்
புல்லறிவு உடையவராக இருத்தல்,வாழ்வில்
இழிந்த நிலையே ஆகும். இது வள்ளுவர்
நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
ரங்கசாமி :- அண்ணே !! ராமசாமி அண்ணே !!
எங்க அண்ணே போயிட்டு வரீங்க ?
ராமசாமி :- தம்பி, நம்ம ஊருலேயே பெரிய
பணக்காரர் சண்முகம் செட்டியாரு, நேத்து
செத்துப்போயிட்டாருல்ல. அதான் அவரோட
இறுதி ஊர்வலத்துலே கலந்துகிட்டு,
மயானக் கரை வரைக்கும் போயிட்டு
வீட்டுக்குபோய் குளிச்சிட்டு வாறன் தம்பி.
ரங்க :- ஏண்ணே !! சண்முகம் செட்டி, அவர்
வாழ்நாளிலே எக்கச்சக்கமா சொத்து சேத்து
வச்சிருந்தாரே ? அவருக்கு வாரிசுகூட
இல்லையே. வட்டி மூலமா கோடிகோடியா
ரொக்கப் பணம், அடகுக் கடையிலே ஏராளமான
நகை நட்டு இதெல்லாம் என்ன செஞ்சாரு ?
ராமசாமி :- அவரு நேத்து வரைக்கும் தன்னாலே
சேத்து வச்சிருந்த ரொக்கம்,நகை,வீடு,நிலம்
இது எல்லாம் நிலையானது என எண்ணிக்கிட்டு
இருந்தாரு. டாக்டர் நேத்து சாயங்காலம் வந்து
நாளைக்கு செத்துருவீங்க அப்படீன்னு
சொன்னதுக்கு பிறகுதான் உணர்ந்தாரு.
அதாலே அவர் சொத்து அத்தனையையும்
தலைவர் கலைஞர் அனாதைக்குழந்தைகள்
இல்லத்திற்கு எழுதி வச்சிட்டு ராத்திரி மண்டைய
போட்டுட்டாரு. இதுதான் உலகின் நிலைமை
தம்பி.சிற்றறிவு உள்ளவங்களுக்குத்தான் இது
சம்பந்தமாக இழிவு ஏற்படும்னு திருவள்ளுவரே
சொல்லிச் சென்றுள்ளார்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் . திருமலை. இரா. பாலு.
( மதுரை T.R. பாலு )
Wednesday, December 3, 2014
எது நமக்கு துன்பத்தினை / கேட்டினைத் தர வல்லது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- தெரிந்து தெளிதல்.
குறள் எண் :- 510.
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பைத் தரும் ... ... ... ...
விளக்கம் :- ஒருவனை/ஓருத்தியை ஆராய்ந்து
பார்க்காமல்தெளிவடைந்துமுடிவுக்குவருவதும்,
ஆராய்ந்துதெளிந்தஒருவனைசந்தேகப்படுவதும்
ஆகியஇவைஇரண்டுமேநீங்கிடாததுன்பத்தினை
தர வல்லது.இதுதிருவள்ளுவர்நமக்கெல்லாம்
அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
ராமையா :- என்ன தம்பி சோமையா எப்படி கீறே ?
சோமையா :- நான் நல்லாத்தான்பா கீறேன்.
நீங்க எப்படி அண்ணே கீறே ?
ராமையா :- போன 2௦11 ம் ஆண்டு நடந்த நம்ம
மாநில சட்டமன்றத் தேர்தல்லே நாம
எல்லோரும் கொஞ்சம்கூட ஆராய்ந்துபார்க்காம
அந்த பொம்பள கைமேலே ஆட்சியைக்
கொடுத்து நாடாள விட்டதால் இப்ப நாம்
எல்லோரும் எம்புட்டு கஷ்டத்தையும்
அவதியையும், துன்பத்தையும் சந்திச்சுக்கிட்டு
வர்றோம் பாத்தியாடா தம்பி
சோம:- அண்ணே நீ சொல்றது கரீட்டு அதே
போலவே நம்ம தல பெருசை எல்லாந்தெரிஞ்ச
அந்த உத்தமரை, சத்திய சீலரை, சந்தேகம்
பட்டுகிட்டு, அவரோட கட்சிக்கு ஓட்டுப்போடாம,
இந்த பொம்பளைய நம்பி நாம எல்லாம்
வாக்களிச்சதுக்கு, நல்லா நம்மளோட வாயிலே
நுரைதள்ளி சாவடிக்கிராய்ங்கடா
அப்படீன்னுதான் ஊரே பேசிக்குது.
ராம :- இத்த பத்தித்தான் நம்ம வள்ளுவரு
ரெண்டாயிரம்வருசத்துக்கு முன்னாடியே
சொல்லிட்டுப் போயிட்டாரு.அத்த படிக்கிற
அறிவு நம்ம அல்லாத்துக்கும் இல்லாத
ஒரே ஒரு காரணத்தாலேதான் அந்த கேடுகேட்ட
பொம்பளே ஆளவந்து இப்ப நாம எல்லோரும்
அழுதுக்க்கினுகீறோம். அதாலே நான் இன்னா
சொல்றேன்னு கேட்டாசெஞ்ச தப்பு அல்லாம்
போதும். இனிவரும் 2016 சட்ட மன்றத்தேர்தல்லே
நம்ம பெருசுக்கும், தளபதிக்கும் நம்மளோட
பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி
இந்த தமிழ்நாட்டை, தொய்வுலே இருந்து நம்ம
தல மீட்டெடுத்து நிமிர்ந்துவாழவழிதரோனும்னு
நான் இப்ப உங்க எல்லோர்ட்டேயும் வேண்டிக்
கேட்டுக்கொள்கிறேன். நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை. இரா. பாலு.
( மதுரை TR. பாலு )
Subscribe to:
Posts (Atom)