Sunday, December 28, 2014

நல்லது செய்யாவிட்டாலும் தீமையை செய்யாமல் இருப்பதே நல்லது. வள்ளுவர் கருத்து !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :- பிறனில் விழையாமை.


குறள் எண் :-  150.



அறன்வரையான் அல்ல செயினும்                                                                                                       பிறன்வரையான்


பெண்மை நயவாமை நன்று... ... ... ... ... ... ...



விளக்கம் :-  ஒருவர் அறத்தினைச் செய்யாமல்


பாவங்களையே செய்தாலும் பிறருக்கு 


உரியவரின்மனைவியை விரும்பாமல்இருப்பதே 


நல்லது. இதுவான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிச் சென்ற குறளும்அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



கங்காதரன் :-  என்ன தம்பி சுதாகரா, இப்ப நம்ம


பரணிதரன் அவன் வீட்டுலே வாடகைக்கு குடி


இருக்கிற கேரளா நாட்டு பெண் குட்டி சுகந்தியை


கணக்கு பண்ற வேலைய விட்டுட்டானாமில்ல.


உனக்கு சேதி தெரியுமா.


சுதாகரன் :- என்ன அண்ணே சொல்றீங்க. எனக்கு


இந்தவிசயமேதெரியாதே.விவரமாச்சொல்லுங்க


கங்காதரன் :-  ஆமாண்டா தம்பி, நேத்து அவனை


நான் கடைத்தெருவிலே வச்சுப்பார்த்தேன்.அவன்


நம்ம மதுரை பாலு சார் எழுதின தினம் ஒரு 


குறள்விளக்கத்தைப் படிச்சானாம். 


திருந்திட்டானாம்.எங்கையோ நல்லா இருந்தாச் 


சரிதான் போ.சரி தம்பி. நான் வாறன்.



நன்றி !!   விளக்கம் !!



அன்புடன். திருமலை இரா.பாலு.



(மதுரை T.R. பாலு.)

No comments:

Post a Comment