Wednesday, December 3, 2014

எது நமக்கு துன்பத்தினை / கேட்டினைத் தர வல்லது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!



தினம் ஒரு திருக்குறள்.




அதிகாரம்  :- தெரிந்து தெளிதல்.



குறள் எண் :-  510.



தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் 

தீரா இடும்பைத் தரும் ... ... ... ... 



விளக்கம் :-  ஒருவனை/ஓருத்தியை ஆராய்ந்து 


பார்க்காமல்தெளிவடைந்துமுடிவுக்குவருவதும், 


ஆராய்ந்துதெளிந்தஒருவனைசந்தேகப்படுவதும் 


ஆகியஇவைஇரண்டுமேநீங்கிடாததுன்பத்தினை 


தர வல்லது.இதுதிருவள்ளுவர்நமக்கெல்லாம் 


அருளிச்சென்ற திருக்குறளும் அதன்விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



ராமையா :- என்ன தம்பி சோமையா எப்படி கீறே ?


சோமையா :- நான் நல்லாத்தான்பா கீறேன். 


நீங்க எப்படி அண்ணே கீறே ?


ராமையா :-  போன 2௦11 ம் ஆண்டு நடந்த நம்ம 


மாநில சட்டமன்றத் தேர்தல்லே நாம 


எல்லோரும் கொஞ்சம்கூட ஆராய்ந்துபார்க்காம 


அந்த பொம்பள கைமேலே ஆட்சியைக் 


கொடுத்து நாடாள விட்டதால் இப்ப நாம் 


எல்லோரும் எம்புட்டு கஷ்டத்தையும் 


அவதியையும், துன்பத்தையும் சந்திச்சுக்கிட்டு 


வர்றோம் பாத்தியாடா தம்பி 


சோம:-  அண்ணே நீ சொல்றது கரீட்டு அதே 


போலவே நம்ம தல பெருசை எல்லாந்தெரிஞ்ச 


அந்த உத்தமரை, சத்திய சீலரை, சந்தேகம் 


பட்டுகிட்டு, அவரோட கட்சிக்கு ஓட்டுப்போடாம, 


இந்த பொம்பளைய நம்பி நாம எல்லாம் 


வாக்களிச்சதுக்கு, நல்லா நம்மளோட வாயிலே 


நுரைதள்ளி சாவடிக்கிராய்ங்கடா 


அப்படீன்னுதான் ஊரே பேசிக்குது.


ராம :- இத்த பத்தித்தான் நம்ம வள்ளுவரு 


ரெண்டாயிரம்வருசத்துக்கு முன்னாடியே 


சொல்லிட்டுப் போயிட்டாரு.அத்த படிக்கிற 


அறிவு நம்ம அல்லாத்துக்கும் இல்லாத 


ஒரே ஒரு காரணத்தாலேதான் அந்த கேடுகேட்ட 


பொம்பளே ஆளவந்து இப்ப நாம எல்லோரும் 


அழுதுக்க்கினுகீறோம். அதாலே நான் இன்னா 


சொல்றேன்னு கேட்டாசெஞ்ச தப்பு அல்லாம் 


போதும். இனிவரும் 2016 சட்ட மன்றத்தேர்தல்லே 


நம்ம பெருசுக்கும், தளபதிக்கும் நம்மளோட 


பொன்னான வாக்குகளை அள்ளி வழங்கி 


இந்த தமிழ்நாட்டை, தொய்வுலே இருந்து நம்ம 


தல மீட்டெடுத்து நிமிர்ந்துவாழவழிதரோனும்னு 


நான் இப்ப உங்க எல்லோர்ட்டேயும் வேண்டிக் 


கேட்டுக்கொள்கிறேன். நன்றி !! வணக்கம் !!



அன்புடன். திருமலை. இரா. பாலு.



( மதுரை TR. பாலு )


No comments:

Post a Comment