உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடிடும் பொழுதில்.
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய
மேன்மைமிக்க தமிழ் உடன்
பிறப்புகளே!!முதலில் உங்கள்
அனைவருக்கும் எனது அன்பு
நிறைந்த வணக்கம்.
இதுவரை அறத்துப்பால் மற்றும்
பொருட்பால் இவைகளில் இருந்து
மட்டுமே திருக்குறளைத்தேர்ந்து
எடுத்து, விளக்கங்களை அளித்து
வந்த உங்கள் அன்பன் மதுரை TR.
பாலு இன்று " ஒருநாள் மட்டும் "
திருக்குறளின் 3 ஆவது பகுதியான
"காமத்துப்பால்"அதிலிருந்து குறள்
ஒன்றினை தேர்வு செய்து தருவதில்
மிக்க மனமகிழ்வு பெறுகிறான். ஏன்
இப்படி ஒரு முடிவு?
விடை என்னவென்றால் அவரது
வாழ்க்கைத்துணைவி அவளுக்கு
இன்று 57 ஆவது பிறந்த தேதி ஆகும்.
கடந்த கால நினைவுகளை மனதில்
அசை போட்டுக்கொண்டு "இன்று
மட்டும்" காமத்துப்பாலில்ஒரு குறள்
எடுத்து அதற்கு விளக்கம் தருவது
என முடிவெடுத்தேன். பார்த்து
படித்து அகம் மகிழ்ந்திட
வேண்டுமாய் என் அன்புத் தமிழ்
உடன் பிறப்புகளை வேண்டி
விரும்பி கேட்டுக்கொண்டுவிடை
பெறும் உங்கள் அன்பன் மதுரை
TR.பாலு.
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- தகையணங்குறுத்தல்.
குறள் எண்:- 1௦87.
கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
விளக்கம் :- மாதருடைய
(பெண்களுடைய) சாயாத
கொங்கைகளின்மேல் அணிந்த
ஆடை, மதம் பிடித்த ஆண்
யானையின்மேல் இட்ட முகபடாம்
போன்றது. இது வள்ளுவர் தரும்
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம்:-
அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே !!
இன்று நான் குறள் விளக்கத்திற்கு
எடுத்துக்கொண்ட பால், காமத்துப்
பால் ஆகும். பொதுவாகவே நாம்
அனைவருமே காமம் என்று
சொன்னால் ஏதோ தீண்டத்தகாத
ஒன்றினை தொட்டதுபோன்ற
உணர்வுகளை வெளிப்படுத்தும் முக
பாவனைதனைக் காட்டிடுவதையே
வழக்கமாக கொண்டிருக்கிறோம்.
இது முற்றிலும் தவறு அன்பர்களே.
இறைவனால் படைக்கப்பட்ட மனித
இனத்திற்கு உண்டான நவரச
உணர்சிகளுள் காமமும் ஒன்று.
எனவே முதலில் நாம் அனைவரும்
இந்தத் தாழ்வு மனப்பான்மைதனை
விட்டு வெளியே வந்தால்தான்
இவ்வுலக இன்பத்தினை
நுகர முழுத்தகுதி படைத்தவர்கள்
என்பது நிரூபணம் ஆகும்.
முதலில் மேற்சொன்ன குறளைப்
பொறுத்தவரையில் வான்புகழ்
வள்ளுவர் குறிப்பிட்டுக்காட்டுவது
இருவரை மட்டுமே. ஒன்று, அழகிய
உடல் வனப்பையும் காண்போர்
மயங்கும்எழில்மிகுகொங்கைகளை
தன்னகத்தே கொண்டுள்ள இளம்
வயதுடைய பெண் ஒருத்தி,
மற்றொன்று அழகிய தந்தங்களோடு
உருவத்தில்மிகவும்பருமனானஆண்
யானை. ஆக இந்த இரண்டு
சாட்சிகள் மட்டுமே இந்தக் குறளைப்
பொறுத்தவரை கதாபாத்திரங்கள்.
முதலில் யானையைப் பற்றிய சில
செய்திகளைச் சொல்லிவிட்டு பிறகு
இளம் வயதுடைய மங்கையின்
பக்கம் வருகிறேன் என் அன்புத்
தமிழ் நெஞ்சங்களே!!
யானை:- இன்று நாம் வாழ்ந்து
கொண்டு இருக்கும் பூமிதனில் மிகப்
பிரம்மாண்டமான உருவத்தைப்
பெற்றுள்ள ஒரே அசையும் ஜீவன்
என்பது இந்த யானை மட்டுமே.
ஆனால் அங்கேதான் நான் எல்லாம்
வல்ல இறைவனின் சக்திதனை
நான் பார்க்கிறேன் என்னுடைய
அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே!!
அவ்வளவு பெரிய உருவத்தைப்
படைத்த இறைவன் அந்த
உருவத்தின் அளவிற்கு சற்றும்
பொருத்தமில்லாத கண் அளவினை
அதற்குப்படைத்ததோடு மட்டும்
இல்லாமல், அந்த சிறிய கண்களும்
நாம் எல்லாம் பார்க்கும் வண்ணம்
சக்தி படைத்த கண்களாக இன்றி
பூதாகரமான தோற்றமாக நாம்
எல்லாம் தெரியும் வண்ணம்
* ( MICROSCOPIC EYES ) *
யானைக்கு விழிகளை இறைவன்
படைத்து அழகு பார்த்துள்ளான்
என்பதே உண்மை. இல்லை
என்றால் அந்த யானை இனம்
நம்மைப்போல் சுண்டைக்காய்
மனிதனுக்கும் துரட்டுகுச்சியான
அங்குசத்திற்கும் கட்டுப்பட்டு
இருக்க முடியாது அன்பர்களே. அந்த
பூதாகரமான அதன் விழிகளுக்கு
நாம் எல்லாம் அதனைவிட பத்து
மடங்கு உருவத்தில் பெரியவர்கள்
போலவும் ஆலமரத்தின் அளவு
மிகப் பெரிய இரும்புத்தடி (அங்குசம்)
நமது கையில் வைத்திருப்பவர்கள்
என எண்ணுவதாலேயே யானை
நமது சொல்லுக்கு, நாம் இடும்
கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடந்து
கொள்கிறது. அதுவே உண்மை.. .. .. ..
2) இளம் வயது பெண் :- இங்கே
வள்ளுவர் குறிப்பிட்டு இருப்பது
சாயாத கொங்கைகளை உடைய
என்று குறிப்பிடுகிறார். இதை நாம்
மிகமிக முக்கியமாக கவனிக்க
வேண்டுகிறேன். இறைவன் அவன்
படைப்பினில் எல்லா உயிரினங்கள்
அனைத்திலும் ஆண் இனத்தினை
மட்டுமே அழகுற படைத்துவிட்டு
இந்த ஒட்டு மொத்த ஆண் இனத்தை
நன்றாக பழிவாங்க வேண்டும்
என்றே முடிவெடுத்து மனிதப் பிறவி
ஒன்றினில் மட்டுமே அழகுற பெண்
என்பவளைப் படைத்தது அவளது
"அழகுக்கு அழகு" சேர்த்திடும்
வண்ணம் இந்த கொங்கைகளைப்
படைத்தது, ஆண் இனத்தினை
மயங்க,கிறங்க,இணங்க வைத்து
விடத்தான் என்பதே முற்றிலும்
உண்மையாகும் அன்பர்களே. ஆக
இப்போது நாம் கட்டுரையின்
தலைப்பு சம்பந்தப்பட்ட
விஷயத்திற்கு வருவோம். சில
பெண்களைப் பார்த்தால்
" பெண்களுக்கே ஆசை " வரும்
அளவிற்கு அவ்வளவு அழகாக
இருப்பார்கள்.ஒரு ஜோதிடர் என்ற
முறையினில் அதற்கு நான் தரும்
விளக்கம், அந்த பெண்களின் பிறந்த
(ஜனனகால) நேரத்தின் போது வான்
மண்டலங்களில் உள்ள நவ
கிரங்களில் சுக்கிரன் என்ற அந்த
கிரகம் அந்த அழகிய பெண்களின்
ஜாதகத்தில் உச்சமாக இருக்கும்
அல்லது நேசர்களோடு இணைந்து
சுபகிரகங்களின் சேர்க்கை பெற்று
அமைந்து இருந்தால் அழகு
என்றால் அழகு அவ்வளவு அழகாக
அவர்கள் பிறவி இருக்கும்
(சமீபத்திய உதாரணம். ஐஸ்வர்யா
ராய்) அந்தக் கால திரைப்படம் "
சொந்தம் " என்ற படத்தில்
கதாநாயகி K.R. விஜயாவும்
அவளது தோழியும் ஆற்றுநீரில்
குளித்துக்கொண்டு இருப்பது
போன்ற காட்சியில் கவியரசர் தனது
அனைத்து கவித்துவத்தினையும்
வடித்து கொட்டி எழுதிய பாடல்
இதோ உங்கள் பார்வைக்கு:-
* கண்ணு படப்போகுது !!
* கட்டிக்கடி சேலையை !!
* பொண்ணுக்கே ஆசை வரும்!!
* போட்டுக்கடி ரவிக்கையை !!
என்ற அந்தப் பாடல் அந்தக்
காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற
பாடல்களுள் ஒன்று.
இந்த ஆண் யானையை சுவாமி
புறப்பாடு, கோவில் திருவிழா,
தேர்வலம் வரும் நிகழ்வுகள் இது
போன்ற பல்லாயிரக்கணக்கான
மக்கள் கூடிடும் இடத்திற்கு கூட்டி
வரும் வேளையில் யானைதனை
வளர்க்கும் பாகன்கள் அந்த யானை
கூட்டத்தில் உள்ளோர்களைப்
பார்த்து மிரண்டு ,வெகுண்டு,
அதனால் பல்வேறு விளைவுகள்
ஏற்படுவதினை தடுத்திடும்
வண்ணம் அதற்கு "முகபடாம்"
என்ற தங்க முலாம் பூசிய அங்கியை
அதன் முகப்பகுதியில் தொங்க
விட்டு அழைத்துவருவது என்பது
வாடிக்கை. அந்த முகபடாம் என்ற
அங்கிதனை யானைக்கு அணிவித்த
உடன் அது அந்த யானையின்
கண்கள் உள்ள பகுதியை நன்கு
மறைத்து விடுவதால் அதனால்
கூட்டத்தையும் அங்கு
கூடியிருக்கும் பெருந்திரளான
மக்களையும் பார்க்கும்வாய்ப்பு
மறைக்கப்படுகிறது என்பதே
உண்மை என் அன்பு நெஞ்சங்களே.
அது போலவே அழகிய எழில் மிகு
மார்பகங்களை உடைய பெண்ணே
உனது சாயாத கொங்கைகளைப்
பார்த்திடுவோர் அதனைக்கண்டு
காமவெறிகொண்டு விடுவார்களோ
என்று எண்ணியோ நீ அந்த
கொங்கைகளை மறைத்திட இந்த
மேலாடையை அணிந்து
உள்ளாயோ என்று திருவள்ளுவர்
எவ்வளவு நாசூக்காக பெண்களின்
அழகின் சிறப்பை வெளிப்படுத்திடும்
வண்ணம் இந்த குறளை நமக்கு
அருளிச் சென்று உள்ளார். அதனை
நாமும் பார்த்து படித்து
இன்புறுவோம் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!!
ஆனால் இந்த இடத்தில் ஒரு சிறிய
பின்குறிப்பு:- வள்ளுவர் குறிப்பிட்டு
உள்ள அளவுள்ள அழகிய
பெண்களை எல்லாம் இந்தக்
காலத்தில் பார்ப்பது என்பது மிக மிக
அரிய ஒன்றாகத்தான் உள்ளது
என்பது மிகவும் வருத்தத்திற்கு
உரிய விஷயம்.
மீண்டும் நாளை சந்திப்போமா ?
நன்றி!! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment