Sunday, December 13, 2015

அழிந்துபோக முடிவெடுத்த அரசாங்கம்,அதிகாரிகள்,ஆசையுடன் அணிந்துகொள்ளும் அணிகலன்கள் எவை ? வள்ளுவர் தருகின்ற விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  மடியின்மை.

குறள் எண்:-  605.


நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 

நெடுநீறார் காமக் கலன்... ... ... 

பொருள் :-  தாமதித்துச் செயல்கள் செய்தல்,
மறத்தல்,சோம்பல் கொள்ளுதல், உறங்குதல்,
ஆகிய இவை நான்கும், அழிந்துபோகக்கூடிய 
அனைவரும் ஆசையோடு அணிந்துகொள்ளும் 
அணிகலன்கள் ஆகும்.  இது திருவள்ளுவர் 
நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 
விளக்கமும் ஆகும்.

( இந்த திருக்குறளுக்கு நாட்டு நடப்பு விளக்கம் 
தேவையே இல்லை, ஏன் என்றால் இங்கே நடப்பதே அதுதான் அதுமட்டும்தான்  என்பதால், அதுசம்பந்தமாகஎந்தப்பதிவும்இங்கேஇடம் பெறவில்லை, என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்)

வாசகர்கள் மன்னிக்கவும். 

அன்புடன். திருமலை.இரா.பாலு.

No comments:

Post a Comment