அழிந்துபோக முடிவெடுத்த அரசாங்கம்,அதிகாரிகள்,ஆசையுடன் அணிந்துகொள்ளும் அணிகலன்கள் எவை ? வள்ளுவர் தருகின்ற விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- மடியின்மை.
குறள் எண்:- 605.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
நெடுநீறார் காமக் கலன்... ... ...
பொருள் :- தாமதித்துச் செயல்கள் செய்தல்,
மறத்தல்,சோம்பல் கொள்ளுதல், உறங்குதல்,
ஆகிய இவை நான்கும், அழிந்துபோகக்கூடிய
அனைவரும் ஆசையோடு அணிந்துகொள்ளும்
அணிகலன்கள் ஆகும். இது திருவள்ளுவர்
நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
( இந்த திருக்குறளுக்கு நாட்டு நடப்பு விளக்கம்
தேவையே இல்லை, ஏன் என்றால் இங்கே நடப்பதே அதுதான் அதுமட்டும்தான் என்பதால், அதுசம்பந்தமாகஎந்தப்பதிவும்இங்கேஇடம் பெறவில்லை, என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்)
வாசகர்கள் மன்னிக்கவும்.
அன்புடன். திருமலை.இரா.பாலு.
No comments:
Post a Comment