Monday, December 21, 2015

சோம்பலுடன் வாழ்பவர்கள் எதனைக் கேட்க நேரிடும் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  மடியின்மை.


குறள் எண் :- 607.


இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து 

மாண்ட உஞற்றி லவர்... ... ... 


பொருள் :-  சோம்பலை விரும்பி ஏற்று 

செயலற்று இருப்பவர்கள் தங்களை பிறர் 

கண்டித்து பேசுவதையும் இகழ்ந்து சிரிப்பதையும் 

கேட்க நேரிடும். இது வான்புகழ் திருவள்ளுவர் 

நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 

விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

இந்தக் குறளுக்கு எற்பவே நமது தமிழ்நாடு 

அரசும்அதன் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், 

அதிகாரிகள் மற்றும் ஒட்டு மொத்த ஆள்கின்ற 

அதிகாரவர்க்கம் செயல்படுவதால், நாட்டு நடப்பு 

விளக்கம் தேவையே இல்லை என்பது கட்டுரை

ஆசிரியரின்கருத்து.


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன். திருமலை.இரா.பாலு.

No comments:

Post a Comment