தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- கள்ளாமை.
குறள் எண் :- 289.
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்... ... ...
பொருள் :- களவாடுவதைத் தவிர ( திருட்டு,
லஞ்சம்,ஊழல்,பிறர் பொருள் அபகரித்தல் )
வேறொன்றும் செய்வது அறியாதவர்கள்,
அளவற்ற தீமைகளைச் செய்தே அழிந்து
போய்விடுவார்கள். இது வான்புகழ் வள்ளுவர்
நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நாட்டு நடப்பு விளக்கம் :-
கன்னையா :- வணக்கம் பொன்னையா அண்ணே அவர்களே.
பொன்னையா :- வணக்கம்.வணக்கம்.வாங்க தம்பி என்ன உலக நிலைமை எப்படி இருக்கு ?. நம்ம தமிழ்நாட்டு நிலவரம் கவலை தரும்படி இருக்குதே தம்பி. உம்என்ன செய்ய. எல்லாம் நம்ம தலை எழுத்து.
கன்னையா:அண்ணே.சும்மாஎதுக்கெடுத்தாலும்
தலைஎழுத்து, விதி, அப்டி இப்டின்னு சொல்லி
ஏண்ணே உங்களை நீங்களே ஏமாத்திகிட்டு
இருக்கீங்க. இலவசத்துக்கு ஆசைப்பட்டு கண்டகண்ட பொறுப்பில்லாத,அரசியல்செய்திடதெரியாதபொம்பள வசம் ஆட்சியை ஒப்படைச்ச நம்ம நாட்டுமக்கள் செஞ்ச அறியாமைதான் அண்ணே முக்கிய காரணம். அட..என்ன..நான்..சொல்றது ? உக்கும்..
பொன்னையா :- தம்பி. நீ சொல்றது நூத்துக்கு நூறும் சரிதான். ஆனா ஆளத்தெரியாத அவங்களுக்கு எப்டி திருட மட்டும் தெரியுது ? இல்ல நான் கேக்கிறேன் ?
கன் :- அண்ணே. அந்த பொம்பளைக்கும் அவுக
கூட்டாளிக்கும் தெரிஞ்சதே அது ஒண்ணுதானே.
ஏற்கனவே பத்து வருசத்துக்கும் மேலாக அந்தக்
கும்பல்அதைசெஞ்சுதானேபலகோடிகோடிகள்
திருட்டு மூலமாக சம்பாதிச்சு இருக்காங்க. அத்த
தெரிஞ்சும் மீண்டும் ஆள்வதற்குத் தேர்ந்தெடுத்த
மக்களை நான் என்னன்னு சொல்றது ?
பொன் :- ஆனா ஒன்னு தம்பி. இப்படி திருடித்திருடியே சம்பாதிச்சு வாழறவங்க, ஏகப்பட்ட தீமைகளை நமது மக்களுக்கு செஞ்சு செஞ்சே அழிஞ்சு போயிருவாங்க.
இது நமது திருவள்ளுவர் சொன்ன கருத்து. நீயே
மேலே குறிப்பிட்ட திருக்குறளைப் படிச்சா உனக்கே உண்மை தெரியும். அது மட்டும் அல்ல. எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், நல்லவங்களுக்கும், நல்ல முறையில் ஆட்சி செய்திடத் தெரிஞ்சவங்களுக்கும்
வாக்கு அளித்திட வேண்டும் என்று மக்களிடம் நாம தீவிர பிரச்சாரம் செஞ்சா மட்டுமே நம்ம நாட்டை நாம காப்பாத்திட முடியும். வரட்டுமா. தம்பி.
கன்னையா :- சரிங்க அண்ணே. நீங்க சொன்னபடியே செய்யறேன்.
நன்றி !!.வணக்கம் !!.
அன்புடன்.திருமலை.இரா.பாலு.
No comments:
Post a Comment