உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :-தெரிந்து செயல்வகை.
குறள் எண்:- 466.
வணக்கம் இன்று நான் உங்கள்
சிந்தனைக்கு தரும் குறளும் அதன்
விளக்கமும் யாதெனின்:-
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்... ... ... ... ... ... ... ...
விளக்கம் :-அதாவது எந்த அரசாக
இருந்தாலும் சரி அல்லது தனி
ஒரு மனிதனாக இருந்தாலும் சரி
அந்த அரசு மக்களுக்கு/தனி
மனிதன் தனக்கு செய்யத் தகாத
செயல்களை செய்கின்றபோது
அந்தசெயல் மக்களுக்கு/அவனுக்கு
கெடுதல்செய்யும்விஷயமாக
ஆகிவிடுகிறது. அது போலவே
மக்களுக்கு/தனி மனிதன் தனக்கு
நல்லது செய்யக்கூடிய
செயல்களை செய்யாமல்
இருந்தாலும் அது மக்களுக்கு /தனி
மனிதனுக்குகெடுதல்செய்யக்கூடிய
விஷயமாக ஆகி விடுகிறது
என்பதனை தெய்வப்புலவர்
எவ்வளவு தெளிவுற கூறி உள்ளார்
நேயர்களே!
சிந்தித்துப் பாருங்கள்.உண்மை
தெளிவாகும்.
நன்றி !! வணக்கம் !!.
அன்புடன். மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment