Friday, August 30, 2013

சிக்கனமாக வாழ்வது எப்படி ? வள்ளுவர் தரும் விளக்கம் (மறு பதிப்பு)



உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு !!                         


இனம் ஒன்றாக,மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!


நம் வெற்றிப் பாதையில் நரிகள் 


வந்தால் விருந்து படைப்போம் 


விண்ணுக்கு !!


தினம் ஒரு திருக்குறள்
 

அனைவருக்கும் வணக்கம்.  உலக 


பொதுமறையான நூல் நம் தெய்வ 


புலவர் திருவள்ளுவர் எழுதிய 


திருக்குறள்.ஒவ்வொரு வீட்டிலும் 


இருக்க வேண்டிய நூல் 


அதுவே.படிக்கவேண்டியது தமிழன் 


ஆகிய நம் ஒவ்வொருவரின் 


கடமையும் கூட.பொதுவா தமிழில் 


ஒரு சொல் வழக்கு உண்டு 


என்னன்னா உள்ளூர் மாடு 


விலைபோகாது என. மதுரையில் 


வசிக்கும் எத்தனைபேர் திருமலை 


நாயக்கர் கட்டிய மஹால் 


பார்த்திருப்பாங்க?அதுபோல 


குற்றாலத்தில் வசிக்கும் 


எல்லோருமா அருவியில் 


குளிப்பாங்க?இல்லைங்க. 


அதுபோலத்தான் தமிழன் 


எல்லோரும் திருக்குறள் படிப்பது 


இல்லை. இனிமேலாவது நாம 


அந்தமாதிரி இல்லாம 


இருக்கணும்னு உங்கஎல்லோரயும் 


நான் கேட்டுக்கிறேன் சரியா.

"சிக்கனம்"

மனிதன் எப்படி சிக்கனமா 


வாழனும்னு அழகா ஒரு குறளில் 


சொல்றார்:-                         


அதிகாரம்   :- வலியறிதல்.       


குறள் எண் :-  478. ஆகாறு அளவிட்டிதாயினும்                                    கேடில்லை

போகாறு அகலாக்கடை .. .. .. ..

என்ன அர்த்தம்னு கேட்டிங்கன்னா 


நமதுவருமானம் அளவு மிக 


கம்மியான அளவு இருந்தாலும் 


பரவாயில்லே நமது செலவுகளை 


அதுக்குள்ளவச்சுகிட்டா. அதாவது 


பொருள் வரும் வழி (வரவு) 


சிறியதாக இருந்தாலும் போகும் 


வழி (செலவு) வரவுக்குமேல்விரிவு 


படாமல் இருந்தால் அதனால் எந்த 


தீங்கும் நமக்கு இல்லை. இதுவான் 


புகழ் வள்ளுவன் நமக்கு தரும் 


குறளும் அதன் விளக்கமும்.


உலகத்திலேயே மிக 


கொடுமையான விஷயம்  


என்னன்னு கேட்டிங்கனா கடன் 


வாங்கறதுதான்.அதனாலே நாம 


எல்லோரும் வரவுக்குள் செலவை 


வைத்துகொள்வோம் என 


இனிமுதற்கொண்டாவது 


திருக்குறள் மேல உறுதி 


எடுத்துகொள்வோம் 


நன்றி.வணக்கம். மதுரை T.R.பாலு. 


மீண்டும் அடுத்த குறள் 


விளக்கத்தில் சந்திப்போம் 


சிந்திப்போம்.
  

No comments:

Post a Comment