Friday, November 29, 2013

பகைவர்கள் செய்திடும் அக்கிரமங்களைப் பொறுத்துக்கொள் !! முடிவு காலம் வரும்போது பகைவரின் தலை தானே கீழே வீழும்...வள்ளுவர் தரும் விளக்கம்.






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 




தினம் ஒரு திருக்குறள்.                           



அதிகாரம்   :-  காலம் அறிதல்.               



குறள் எண் :-  488.                                           



செறுநரைக் காணின் சுமக்க 

                                                          இறுவரை 

காணின் கிழக்காம் தலை... ... ... ... ... ... 




வள்ளுவர் தரும் விளக்கம் :-                    



பகைவரைக் கண்டால் பொறுத்துச் 



செல்ல   வேண்டும்.   அந்தப் 



பகைவருக்கு முடிவுகாலம் என்று 



ஒன்று வரும். அந்தநாள்வரும்போது 



அந்தப்பகைவரின்தலை,கீழேவிழும். 




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



(இந்தக் கட்டுரையில் வரும்/



குறிப்பிடப்படும்-நிகழ்வுகள்/



சம்பவங்கள், பெயர்கள்,குறிப்புகள் 



இவை எல்லாம் கற்பனையே தவிர 



வேறு எந்தத் தனிப்பட்ட நபரையோ 



அல்லது அமைப்புகளையோ 



குறிப்பிடுவன அல்ல என்பதனைப் 



பணிவோடு தெரிவித்துக் கொள்ள 



கடமைப்பட்டு உள்ளோம். முழுக்க, 



முழுக்க இந்தக் கட்டுரையில் வரும் 



அனைத்து சம்பவங்களும் கட்டுரை 



ஆசிரியரின் கனவினில்வந்தஒன்றே 



தவிர, யாரையும்/எவரையும் பற்றிக் 



குறிப்பிடுவன அல்ல,அல்ல............. 



அல்லவே அல்ல.)



                                                             



அந்த நாட்டின் பெயர் எழுத்து 4.         



அதில் உள்ள இந்தக் கதை 



நடைபெறுவதாகக் கதாஆசிரியரின் 



கற்பனையில் உருவான அந்த 



தொன்மையான மொழி பேசிடும் 



மாநிலத்தின் பெயர் அதில் வரும் 



எழுத்து 5. அந்த மாநிலத்தின் 



தலைநகர் அதன் பெயரில் வரும் 



எழுத்து 3. அந்தத் தலைநகருக்குள் 



உள்ள ஒரு சிற்றூர்அதுதான் மெட்டி. 



அந்த சிற்றூர்தனில் வாழ்ந்து 



வருபவர்தான் திரு மு. அன்புநிதி 



அகவை 9௦ தாண்டினாலும் கூட 



இளைஞனைப் போல அதே சுறுப்பு. 



சென்றமுறை நடைபெற்ற 



பஞ்சாயத்து தேர்தலில் இவரது 



அரசியல் எதிர்க்கட்சி தலைவர் 



பெயர் J. ஜெயந்தன். பல சதிவேலை 



செய்து அந்த மெட்டி டவுண் 



பஞ்சாயத்து தேர்தலில் உள்ளூரில் 



உள்ள நாடக நடிகர் அஜயகாந்த் 



இவர் ஒரு சிறிய நற்பணி மன்றம் 



அமைத்து இருந்தார். அவருக்கு 



என்று ஒரு கணிசமான வாக்கு 



வங்கி அந்த சிற்றூரில் இருந்தது. 



அவரையும் J. ஜெயந்தன் தனது 



கூட்டணியில் சேர்த்து 



வெற்றிபெற்று பின் இப்போது எந்த 



நடிகரின் வாக்குகளைப் பெற்று 



ஆட்சி அமைத்திடும் வாய்ப்பினைப் 



பெற்றாரோ, அவர் மீதே பல பொய் 



வழக்குகள் போட்டு இப்போது அவர் 



பல நீதிமன்றங்களின் வாசலில் 



தவம் இருக்க வேண்டியதாக 



ஆயிற்று. சரி அன்பர்களே !! 



இப்போது நாம் கட்டுரையின் 



தலைப்பு சம்பந்தமான 



விசயத்திற்குள் செல்வோமா ?




(இதன் தொடர்ச்சி நாளை வெளி 


வரும்அதுவரை நாமும் 


தொடர்வோம்.)                      (தொடரும்)

No comments:

Post a Comment