Thursday, April 3, 2014

உன்னை மதிக்காதவர் பின் சென்று உயிர்வாழ்வதைவிடவும் அழிந்துபோவது நல்லது !! வள்ளுவர் தரும் அறிவுரை !!




உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்   :-  மானம்.                                 



குறள் எண் :-  967.                                           



ஒட்டார்பின் சென்றொருவன்                 

                        வாழ்தலின் அந்நிலையே 


கெட்டான் எனப்படுதல் நன்று... ... ... ... 



விளக்கம் :- மதியாதவரின் 



பின்சென்று ஒருவன் உயிர் 



வாழ்வதைவிட, அவ்வாறுசெல்லாத 



நிலையில் நின்று அழிந்தான் என்று 



சொல்லப்படுதல் நல்லது ஆகும்.இது 



வான்புகழ் வள்ளுவர் நமக்கு 



அருளிய குறளும் அதன்விளக்கமும் 



ஆகும். 


நமது நாட்டுநடப்பு விளக்கம்:-                   


அன்பர்களே !!  இந்தக் குறள் நான் 


எதற்காக இங்கே குறிப்பிட்டேன் 


என்று சொன்னால் நம்மை 


மதிப்பவர்களுக்கு நாம் உயிரைத் தர 


வேண்டும். ஆனால் நம்மை 


மதியாதவர்தலைவாசல்(வீட்டிற்கு) 


சென்று மிதித்திடல் மானமுள்ள 


எவனும் செய்திடாத ஒரு செயலே 


ஆகும் என்பதை வலியுறித்திக் 


கூறிடத்தானே தவிர முன்பு 


தே.மு.தி.க. வில் இருந்து பின் 


இப்போது அ.இ.அ.தி.மு.க.கட்சிக்கு 


மாறிய பண்ருட்டி இராமச்சந்திரன் 


போன்ற அரசியல் 


செல்லாகாசுகளின்நடவடிக்கையை 


கண்டித்து எழுதிட வேண்டும் என்ற 


நோக்கத்திற்காக அல்ல.

No comments:

Post a Comment