ஆழி சூழ்ந்த இவ்வுலகில் உலகமகாபாவி என்பவன் யார் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பிறனில் விழையாமை.
குறள் எண் :- 142.
அறன்கடை நின்றாருள் எல்லாம்
பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்... ... ...
விளக்கம் :- பிறருடைய
மனைவிக்காக அவளது இல்லத்தின்
முன்பாக, அவளிடம் தேகசுகம்
வேண்டி காத்துக்கிடப்பவனே
பாவிகளுள் மகாபாவியாவன்.
இது வள்ளுவர் நமக்கு அருளிச்
சென்ற குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
கந்தையா :- டேய் இராமையா
உனக்கு சேதி தெரியுமாடா ?
இராமையா :- என்னடா சொல்லு.
சொன்னாத்தானே சேதி தெரியும்.
கந்த:- நம்ம பாலையா இருக்கானே
அந்தப் பய, அவன் வீட்டுக்கு
எதிர்வீட்டிலே குடியிருக்கிற நம்ம
பயில்வான்புண்ணியகோடியின்
பொண்டாட்டி, இருக்காளே குமுதா,
அவளைத் தானும் விரும்புவதாகச்
சொல்லிஅவளோட கையப் புடிச்சு
இழுத்துஇருக்கானாம். அவளோட
வீட்டுக்கே போயி நின்னு..
இராமை:- உம் !! அப்புறம் !!
கந்த:- அப்புறம் என்ன அப்புறம்.
உடனே அவ புருசன் பயில்வான்
புண்ணியகோடிகிட்டே ஓடிப்போயி
இப்படி இப்படி விசயம்னு
சொல்லிபுட்டாடா. உடனே அவன்
நம்ம பாலையாவை மரத்துலே கட்டி
வச்ச உரி உரின்னு தோலை உரிச்சு
தலைகீழா வச்சு உப்புக்கண்டம்
போட்டுட்டானாம்.
இராமை:- பிறவு ?
கந்த:- பிறவு என்ன பிறவு. ஊர்கூடி
அவனோட உச்சந்தலையிலே பச்ச
குத்திட்டானுங்கடா !!
பச்சைகுத்திட்டானுங்கடா !!அவனது
நெத்தியிலேயும் அதோடகூட சேத்து
இராமை :- என்னனு பச்சை குத்தி
இருக்கானுங்க?
கந்த:- " உலக மகாபாவி " என்று
இவனுக்கு பட்டம்வேற
தந்துட்டானுங்க.
இராமை:- எல்லாம் தலை எழுத்து
யாரும் அழிக்க முடியாது. அது ஏன் !!
அதை எழுதிய பிரம்மதேவன்கூட
அதை அழிக்க முடியாது.சரிடா நான்
போயிட்டு வாரேன்.அப்புறம்
சந்திக்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment