Tuesday, January 12, 2016

பணம் வைத்திருப்பது பெரும் துன்பத்தையே தரும். எங்கே ? !! வள்ளுவர் தந்த விளக்கம் !!







                           தினம் ஒரு திருக்குறள்.

                 அதிகாரம்   :-  கொடுங்கோன்மை.

                                குறள் எண் :-  558.


இன்மையின் இன்னாது உடைமை                                                                                                            முறைசெய்யா 

மன்னவன் கோற்கீழ்ப் படின்... ... ...

பொருள் :-  முறைதவறிய ( ஆட்சி செய்திடத் தெரியாத,மக்கள் நலன் பற்றி கவலை எதுவும் படாத,எதேச்சதிகாரம்மிகுந்த,அராஜகம் செய்திடும்) அரசன்/அரசி/முதல்வர் ஆட்சி 
அதிகாரத்தின்கீழ் வாழ்ந்திடும் மக்கள், பொருள் இன்றி இருப்பதை விடவும், பொருள்/பணம் வைத்திருப்பதே பெரும் துன்பத்தைத் தரும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.

நாட்டு நடப்பு விளக்கம் :-

கருப்பாயி :- என்ன மீனாட்சி அக்கா சவுக்கியமா ?

மீனாட்சி :- சவுக்கியமா எங்க இந்த ஆட்சியிலா ?அட போங்க அக்கா போங்க !! நீங்க ஒன்னு நானே இங்க நொந்து கிடக்குறேன். சவுக்கியமா அது இதுன்னு கேட்டுக்கிட்டு இருக்கீங்க.

கருப்பாயி :-  என்ன அக்கா கதை வுடுறீங்க ? இல்லஎண்ணை குடத்தை போட்டவளும் அழுதாளாம் வெத்துக்குடத்தை போட்டவளும்  அழுதாளாம் அந்தக் கதையா இல்ல கீது. யக்கா எங்களை மாதிரி ஏழைங்க காசு பணம் இல்லாம கஷ்டப்படுறோம் நியாயந்தான்.சுத்தமா கைலே பணம் கிடையாது இந்தா பொங்கல் வேற வருது இன்னா செய்றதுன்னு சொல்லிட்டு கையப் பிசைஞ்சுக்கினு கீறோம்.அது எங்கதலைஎழுத்து.உனக்கு என்னக்காவீடு,வாசல்,தோட்டம்,தொரவு,காரு,பங்களா,சொத்து,சுகம் இத்தனையும் நீங்க வச்சுக்கினு நீங்களும் கிடந்தது அல்லாடுறீங்க.இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்.

மீனாட்சி :- அடியே புத்தி கெட்ட கழுதை. நீ சொல்றது என்னவோ ஒருவகைலே பாத்தா சரிதான். ஆனா இங்க நிலைமை அப்டி இல்லையேடி.

கருப்பாயி :- இன்னா நிலைமைக்கு கேடு வந்துச்சு?

மீனாட்சி :- கருப்பாயி உன்ன மாதிரி கையிலே ஏதும் இல்லன்னு வச்சுக்க ஒரு கவலையும் கிடையாதுடி. அது ஒண்ணுதான் உன்னோட கவலை.ஆனா என்னைய மாதிரி இருக்குறவங்க இந்த கேடுகெட்ட ஆட்சியிலே படுற கஷ்டமும் தும்பமும் சொல்லமுடியாதுடி.சொல்லமுடியாது.

கருப்பாயி :- ஏன்..ஏன்..சொல்ல முடியாது ?

மீனாட்சி :- இப்ப இன்னும் மூணு மாசத்துலே தேர்தல் வரப்போகுது. நீங்கதான் கையிலே துட்டு வச்சு இருக்கீங்களேன்னு சொல்லிட்டு இந்த ஆளும்கட்சி அதிகாரவர்க்கம்எங்களைபடுத்துறபாடு இருக்கு பாரு. அப்பப்பா சொல்ல முடியாதுடி. போதாக் குறைக்கு வார்டு கவுன்சிலர்ல இருந்து MLA முதல் MP வரைக்கும் ஈன்னு பல்ல இளிச்சுக்கிட்டு வந்துருவானுங்க.இது போதாதுன்னு வட்டம் மாவட்டம் அது இதுன்னு எல்லாப்பயகளுக்கும் அழுது தொலையனும். இத்தோட நம்மளை வுட்டானுங்கன்னு நினைக்கிறே. ஊஹூம்..அதான் இல்ல...மந்திரி,மந்திரியோட எடுபிடி,கையாளு அப்டி இப்டின்னு அல்லாப் பயகளுக்கும் காசு கொடுத்து முடியாதுடி. இந்தமாதிரி கொடுங்கோல் ஆட்சியிலே காசு இல்லாம இருக்குறதை விட பெருங்கொடுமை பணம் இருக்கவங்களுக்குத்தான் அப்டீன்னு ஐயன் திருவள்ளுவரே சொல்லியிருக்காரே.நம்ம மதுரை TR.பாலு சார் கொடுத்திருக்கிற அய்யன் திருவள்ளுவர் எழுதின குறளையும் அதன் பொருளையும் படிச்சுப்பாருடி உனக்கே புரியும் சரி நிறைய வேலை கிடக்கு.நான் வரட்டா கருப்பாயி!!

கருப்பாயி :- சரிங்க அக்கா !!நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை. இரா.பாலு.

No comments:

Post a Comment