Tuesday, January 26, 2016

நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள ( பாதுகாத்திட) நாம் எதை காப்பாற்றிட வேண்டும் ? வள்ளுவர் தந்த விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-  வெகுளாமை.


குறள் எண் :-  305.


தன்னைத்தான் காக்கின் சினம்காக்க                                                                                                          காவாக்கால் 
தன்னையே கொல்லும் சினம்... ... ...


பொருள் :-  தன்னைத்தானே காத்துக்கொள்ள/பாதுகாத்திட விரும்பினால், தன்னிடம் சினம்/கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால்அந்த சினம்/கோபம் அவனையே அழித்துவிடும்.இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

சோணகிரி :- என்ன தம்பி அருணகிரி. மூணு நாள் 
தமிழ்நாடு சட்டமன்ற முடிவில் ஆளும்கட்சித் தலைமைஎன்னடா இம்புட்டு கோபமும், ஆவேசமும் கொண்ட ஒரு தொனியில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசுனதை தொலைகாட்சியில் பாத்தியாடா தம்பி.

அருணகிரி :- அந்தக் கன்றாவிய என் ரெண்டு கண்ணாலே பாத்து அழுதேன்.

சோணகிரி :- அட..என்னடா..இது...இம்புட்டு கரிசனம் அந்தப்பொம்பள மேலே உனக்கு திடீர்னு ? இல்ல..கேக்கேன்.

அருண:- அட..போங்கண்ணே நீங்க ஒன்னு. கரிசனமும் இல்லை..ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இப்படி கோவப்பட்டா அழிஞ்சு போயுறுவாக அந்த பொம்பளன்னுதானே எனக்கு கவலை.

சோண :- அட..அழிஞ்சா..அழிஞ்சு தொலையட்டுமே நமக்கு என்னடா தம்பிகவலை. உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்..தப்பு செஞ்சவ தண்டனை அனுபவிக்க்கனும். இதுதானேடா தம்பி உலக நிலை.
அட..என்ன...நான்..சொல்றது.

அருண:- அட..அது இல்லண்ணே..செஞ்ச அல்லா 
தப்புக்கும் தவறுக்கும் தண்டனைஅனுபவிக்காம 
அழிஞ்சுபோயிறக்கூடாதுல்ல..அத..சொன்னேன்..

சோண :-  அட..பரவாயில்லையே..தம்பி.. உன்னைய நான்என்னமோன்னுநினைச்சேன்..பொழைச்சுக்குவடா  தம்பி....

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

No comments:

Post a Comment