Monday, January 18, 2016
மிகப்பெரிய குற்றம் என்பது எது ? திருவள்ளுவர் சொன்னது !!
சுதாகரு :- அட..என்ன..அண்ணே..நீங்க ஒன்னு. இதுக்குப்போயி செருப்பு கிருப்புன்னு சொல்லிட்டு. விடுங்க அண்ணே.
மன்னாரு :- ஏண்டா தம்பி கடந்த நான்கரை ஆண்டுகளா எத்தனை லட்சம்டா சம்பாதிச்சு இருப்ப?
சுதா :- அட..போங்க அண்ணே..நீங்க.. என்ன சுத்த விவரம் இல்லாம கேட்டுகிட்டு இருக்கீங்க ? அதெல்லாம் அந்தக் காலம் அண்ணே . எத்தனை கோடி சம்பாதிச்சு இருக்கே ? அப்படி கேளு
மன்ன:- தம்பி எனக்கு தலையே சுத்துதுடா. என்ன கோடியா?
சுதா :- அண்ணே இதெல்லாம் இப்ப ரொம்பவும் சர்வ சாதாரணம்தான்.
மன்:- ஏண்டா தம்பி இது இப்டி சம்பாதிக்கிறது தப்புன்னு உனக்கு தெரியலையாடா ?
சுதா :- அண்ணே நீங்க பழைய பஞ்சாங்கமா இருக்கீங்க.இதுதான் இப்ப உள்ள லேட்டஸ்ட் பாலிடிக்ஸ்.பணம் கொள்ளையடிக்கிறதுக்கு மட்டும்தான் நாங்க அரசியலுக்கே வறோம் அண்ணே.நீங்க பாட்டுக்கு...சும்மா கிடங்க அண்ணே.
மன்:- அப்டியாடா தம்பி. ஆனா திருவள்ளுவர் என்ன சொல்லி இருக்காருன்னு சொன்னா இந்த மாதிரி பொருளாசைதான் இருக்கிற குற்றங்களிலேயே பெரிய குற்றம்னு இல்ல சொல்லியிருக்காரு ?
மன் :- வேணாண்டா தம்பி. அப்படிப்பட்ட வழி உன்கிட்டே மட்டும் இருக்கட்டும். நான் வரட்டா.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment