Monday, February 10, 2014

பொண்டாட்டி பேச்சுக்குக் கட்டுப்பட்டு பயந்து நடக்கிற எவனும் உருப்படவே மாட்டான் !!- இது வள்ளுவர் தரும் விளக்கம் ஆகும்!!






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



தினம் ஒரு திருக்குறள் .



அதிகாரம்   :-  பெண்வழிச் சேறல்.       



குறள் எண்:-  9௦8.



நட்டார் குறைமுடியார் நன்றாற்றார்


                                                 நன்னுதலாள்


பெட்டாங்கு ஒழுகு பவர்... ... ... ... ... ... ... 



விளக்கம் :-  மனைவி விரும்பியபடி 



காரியங்களை செய்து முடிப்பவர் 



தன்னுடைய நண்பருக்கு ஏற்பட்ட 



குறையை நீக்கிட மாட்டார்.எந்த 



அறத்தையும் செய்யமாட்டார். இது 



வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் 



அதன் விளக்கமும் ஆகும்.                   




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-           



பயந்தராஜன் :- (தூங்கிக்கொண்டு 



இருக்கும் தனது மனைவிக்குகாலை 



காபி தந்து எழுப்புகிறார்.) தங்கம்... 



அம்மா...தங்கம்... மணி எட்டு 



ஆச்சும்மா. இன்னைக்கு ஒன்பது 



மணிக்கு ஆபீஸ் போகனுன்னு 



சொன்னியே என் தங்கம்..எந்திரிடா 



தங்கம்.                                                               



தங்கம் :-  (கோபத்துடன்)ஏங்க...உம்... 



மனுசியை கொஞ்சநேரம் தூங்க 



விட மாட்டீங்களே !! அடடா...எப்பப் 



பாரு அசந்து தூங்குறப்பத்தான் 



எழுப்புவீங்க....உங்க துயரம்...தாங்க 



முடியலே...                                                     



பயந்த:-  இல்ல தங்கம்..சீக்கிரம் நீ 



இன்னைக்கு ஆபீஸ் போனுன்னு 



சொன்னியில்ல..அதனாலதான்நான் 



எழுப்பினேன்..தப்பா இருந்த ப்ளீஸ் 



மன்னிச்சுக்கம்மா.                                         



தங்கம் :- ஆமா. செய்யிற 



தப்பெல்லாம் செய்ய வேண்டியது. 



அப்புறமா மன்னிப்பு கேக்க 



வேண்டியது. இதே உங்களுக்கு 



பழக்கமா ஆயிருச்சு. உம்... நீங்க 



என்ன செய்வீங்க.. உங்களைஉக்கார 



வச்சு சோறு போடுறேன்னில்ல.. 



நீங்க என்ன செய்வீங்க..நீங்க 



மன்னாரன் கம்பெனியில வேலை 



பாக்கிறதா சொன்னதை நம்பி எங்க 



அப்பாவும் என்னைய உங்களுக்கு 



கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. 



எல்லாம் என் தலை எழுத்து. 



உங்களைப் போய் கல்யாணம் 



பண்ணிக்கிட்டேனே.                                 



பயந்த:- (தன மனசுக்குள்-ஏன் நல்ல 



ஒரு ஆம்பிளையைபாத்துதாராளமா 



கல்யாணம் பண்ணிக்கிற 



வேண்டியது தானே --யார் 



வேணான்னு சொன்ன ) ஏம்மா ? 



எதுக்கு எடுத்தாலும் இப்படி 



கோவிச்சுக்கிறே ?                                       



தங்கம் :- ஆமா உங்களுக்கு எத்தன 



வாட்டி சொல்றது  என்னையை 



அடிக்கடி தங்கம் தங்கம்னு பேரைச் 



சொல்லிக் கூப்பிடாதீங்கன்னு. உம்.. 



இல்ல கேக்கிறேன். உங்களோட 



ஒரே ரோதனையாப் போச்சு.                   



பயந்த:- சரிம்மா இனிமே சத்தியமா 



பேரைச் சொல்லிக் கூப்பிடவே 



மாட்டேன். போதுமா ?                                 



தங்கம் :- சொல்றீங்க. ஆனா 



அந்தமாதிரி எங்க நடந்துக்க 



மாட்டேங்கிறேன்களே. கோவம் 



மட்டும் பொத்துக்கிட்டு வந்திருமே 



ஆமா. காலையிலே என்ன டிபன் 



பண்ணிவச்சுருக்கீங்க சொல்லுங்க 



படக்னு.                                                             



பயந்த :- இட்லியும் தக்காளி சட்னி 



வச்சிருக்கேம்மா. வேற என்ன 



செய்யணும் சொன்ன உடனேயே 



செஞ்சு தாரேன்.                                               



தங்கம் :- ஏங்க உங்களுக்கு 



எத்தனை தரம் சொல்றது மல்லிச் 



சட்னி எனக்கு ரொம்ப பிடிக்கும்னு 



ஒரு தரம்தான் என்னாலே சொல்ல 



முடியும். போயி உடனே அரைச்சு 



வைங்க. நான் குளிச்சுட்டு சீக்கிரமா 



ஆபீஸ் போனும். ஆமா.                           



 பயந்த :- சரிம்மா. இப்ப உடனேயே 



அரைச்சுடுறேன். நாளையிலே 



இருந்து நீ சொல்லாமலேயே 



செஞ்சுடுறேன்.                                               



தங்கம் :- சரி..சரி..நீங்க போறப்போ 



இந்த காபி குடிச்சு வச்ச தம்ளரையும் 



தவராவையும் கொண்டு போயி 



உடனே கழுவி வையுங்க. 



இதெல்லாம் ஒருத்தி எப்பயும் 



உங்களுக்கு சொல்லிட்டு 



இருக்கணும் 

                                                       


பயந்த :- சொல்லும்மா நீ எத்தனை 



வாட்டி வேணா சொல்லிட்டே 



இருக்கலாம். ஏன்னா நீ இந்த வீட்டு 



முதலாளிஉன்னையவிட்டா எனக்கு 



வேற போக்கிடம் ஏது . சாக்கடை 



தண்ணிக்கு போக்கிடம் ஏது . நான் 



ஒரு வேலையத்தவன்.  (மனசுக்குள்--



இப்படி பொண்டாட்டிகிட்டே ஏச்சும் 



பேச்சும் கேக்கனும்கிறது என்னோட 



தலை எழுத்து.)                                               



அன்பர்களே !! நமது நாட்டு நடப்பு 



விளக்கம் இத்துடன் நிறைவு 



பெறுகிறது. இப்படி ஒரு மனைவிக்கு 



ஒரு புருஷன் இருக்கிறதுக்கு பேசாம 



தூக்கிலே தொங்கிடலாம். மீண்டும் 



நாளைக்கு வேறு ஒரு குறள் 



விளக்கத்தில் நாம் சந்திப்போம். 



நன்றி !! வணக்கம் !!                                 



அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment