Thursday, February 27, 2014

ஊக்கம் உடையவனின் அடக்கம் எத்தன்மை படைத்தது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!-நவீன பாரத யுத்தத்தை !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு !!                         



தினம் ஒரு திருக்குறள் .                                                     



அதிகாரம்   :-  காலம் அறிதல்.                                         



குறள் எண் :-  486.                                                                     



ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்                   



தாக்கற்குப் பேருந் தகைத்து... ... ... ... ... ... ...                 




விளக்கம் :-  போர் புரியும் குணம் படைத்த 



ஆட்டுக்கிடா பின்வாங்கிச் செல்வது போல 



ஊக்கம் உடைய ஒருவன் தக்க காலத்தை 



எதிர்நோக்கிக் காத்து இருப்பான். இது வான்புகழ் 



வள்ளுவர் நமக்கு அருளிய குறளும் அதன் 



விளக்கமும் ஆகும்.                                                           





நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  இந்த குறளுக்கு 



நான் வேறு எந்த நாட்டின் நடப்பு விளக்கத்தை 



சொல்ல வேண்டும். நம் கையிலேயே 



இருக்கிறதே உதாரணம். வெண்ணையைக் 



கையில் வைத்துக்கொண்டு ஒருவன் நெய்க்கு 



அலைந்த கதையாக இருக்கும்.  ஆம்அன்பர்களே 



நம் தாழ்ந்ததமிழகத்தில் இப்போதுநடைபெற்றுக் 



கொண்டு இருக்கும் இந்த நவீன பாரத யுத்தத்தில் 



பாண்டவர்கள் அணியாக முத்தமிழ் அறிஞர் 



கலைஞர் அவர்கள் தர்மராகவும், கௌரவர்கள் 



அணித்தலைமையாக நவீன் துரியோதனியாக 



தமிழ்நாட்டின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் 



ஒரு அனைத்து இந்திய என்று பெயரளவில் 



கட்சிக்குத் தலைப்பு வைத்துக்கொண்டு 



செய்கின்ற அனைத்து வேலைகளும் சிற்றூர் 



பஞ்சாயத்து வேலைகளாகவே இன்றையதினம் 



செய்து கொண்டிருக்கும் முதல்வர் இந்த 



துரியோதனி என்கின்ற கதாபாத்திரத்தை ஏற்று 



சிறப்புற நடித்துக்கொண்டு இருக்கிறார். இங்கே 



கண்ணனாக அமர்ந்து இருப்பது யார் என்று 



கேட்டால் அது தளபதி மு.க.ஸ்டாலின் என்பதை 



நாம் யாருக்கும் பிளக்ஸ் பானர் போட்டு 



காண்பிக்க வேண்டிய அவசியம் இல்லை 



அன்பர்களே.  ஆட்சிகள் மாறி மாறி 



அமைவதுதான் ஜனநாயகத்தின் அழகு.  ஆனால் 



அதற்காக முந்திய ஆட்சியாளர்களை 



பழிவாங்குவது அவர்கள் மீது பொய் வழக்குகள் 



போட்டு உள்ளே தள்ளுவது, இதெல்லாம் 



நியாயமா ?  இங்கே தமிழ்நாட்டின் மூத்த 



முதுபெரும் தலைவர் கலைஞர் திரு 



மு.கருணாநிதி அவர்கள்தான் இந்தக் குறளில் 



குறிப்பிட்டுள்ள ஆட்டுக்கிடா. அவர் இப்போது 



பின்வாங்கிச் செல்வதுதான் நடைபெற உள்ள 



பாராளுமன்ற தேர்தல். அதில் கலைஞர் 



பெறப்போகும் வெற்றிதான் அவரது கடும் 



உழைப்புக்குக் கிடைக்க இருக்கும் மாபெரும் 



ட்ரைலர் வெற்றி ஆகும். அதன்பிறகு தமிழ்நாடு 



சட்டமன்றத்திற்கான தேர்தல். அப்போதுதெரியும் 



வெல்வது வாய்மையா ? அல்லவா ? என்பது 



அந்த நேரம் உண்மை ஊருக்குப் புரியும். 



பார்ப்போம் நடைபெறப்போகும் நவீன மகா 



பாரதக் கதையின் போர்காட்சிகள்.  அன்பர்களே 



நான் எதற்காக இந்தக் கதைக்கு மகாபாரதத்தை 



உதாரணமாக எடுத்துக்கொண்டேன் என்றால் 



அதற்கு உண்டான காரணங்கள் இதோ :-                      


1)  அங்கே சூழ்ச்சியால்/சூது விளையாட்டால் 



இராஜ்ஜியத்தை இழந்தவர்கள் பாண்டவர்கள்.   



இங்கே இலவச விளம்பரத்தால் ஆட்சியை 



இழந்தவர் கலைஞர் அவர்கள்.



2)  அங்கே சகுனியாக செயல் பட்ட 



கதாபாத்திரத்தை இங்கே மிகச் சரியாக செய்து 



கொண்டு இருப்பவர் துக்ளக் ஆசிரியர் திரு 



சோ.இராமசாமி ஆவார்.                                                     



 3) அங்கே விபீஷணின் கதாபாத்திரத்தை சென்ற 



சட்டமன்றத் தேர்தலில் அம்மையாருடன் கூட்டு 



வைத்ததன் மூலம் அவரை ஆட்சிக் கட்டிலில் 



ஏற்றி அழகு பார்த்தவர் இங்கே நடிகர் 



விஜயகாந்த் ஆவார். பின்னாளில் இவர் என்ன 



ஆனார் என்பதை இந்த நாடே அறியும்.                         



 4)  மகாபாரத யுத்தத்தினில் ஒலிக்கப்பட்ட 



உபதேசம்தான் கீதாஉபதேசம். இங்கே 



ஒலிக்கப்பட இருக்கும் உபதேசம்தான் 



கலைஞரின் உபதேசம்.                                                         



5) அங்கே தாரக மந்திரம் சத்தியமேவ ஜெயதே !! 



இங்கே ஒலிக்க இருக்கும் மந்திரம் வாய்மையே 



வெல்லும் என்பதே ஆகும்.   மேலும் தர்மத்தின் 



வாழ்வுதன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மம் 



வெல்லும். இதுதான் மகாபாரதக்கதையின் 



மையக் கரு. இங்கே எப்படி அது சொல்லப்படும் 



என்றால் தமிழ்நாட்டின் ஆட்சியை பதவி 



வெறியாளர்கள் கொஞ்ச ஆண்டுகள் 



நிர்வகிப்பார்கள். இறுதியில் தர்மம் 



வெல்கின்றபோது கலைஞரின் தலைமையின் 



கீழ் ஆட்சி அமையும். உண்மை வெல்லும். 



இதுதான் நடைபெறப்போகும் தமிழ்நாட்டின் 



வரலாறு. இதையே இந்த உலகம் காண உள்ளது.                                                                        



நன்றி !! வணக்கம் !!                                                               



அன்புடன். மதுரை T.R.பாலு.                                                            

No comments:

Post a Comment