தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- வரைவின் மகளிர்.
குறள் எண் :- 917.
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சின்
பேணிப் புணர்பவர் தோள்... ... ...
விளக்கம் :- நெஞ்சமதில் பொருளை (பணத்தை)
மட்டுமே எண்ணி, உடலால் மட்டுமே (உள்ளத்தால்
அல்ல) கட்டித் தழுவிடும் விலைமகளிரது
தோள்களை, நிறைகுணம் அற்ற நெஞ்சத்தவர்களே
விரும்புவார்.இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment