உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- நெஞ்சோடு கிளத்தல்.
குறள் எண் :- 1247.
காமம்விடு ஒன்றோ நாண்விடு
நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு... ... ...
வள்ளுவர் தரும் விளக்கம் :-
எனது நல்ல நெஞ்சமே !!
ஒன்று காம உணர்வுகளை
விட்டுவிடு !!
அல்லது
நாண உணர்வுகளை விட்டுவிடு !!
இந்த இரண்டு உணர்வுகளையும்
ஒருசேர பெண்ணிடம் இருப்பதனை
என்னால் இனியும்பொறுத்துக்
கொள்ள முடியாது. இது
திருவள்ளுவர் தந்த குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
(மிகவும் முக்கியமான குறிப்பு:- இந்த
நமது நாட்டு நடப்பு விளக்கத்தை
படிக்கும் இந்தக் கால இளம்
பெண்களின் தனிக் கவனத்திற்கு :-
தயவு செய்து அம்மா, (மன்னிக்க
வேண்டும்!! என்னை தயவுசெய்து
அன்பர்களே!!ஏறத்தாழ கடந்த பத்து
ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப்
பொறுத்தவரையில், இப்போது தமிழ்
அகராதியில் இந்த புனிதமான
"அம்மா" எனுஞ்சொல் தாயகத்தில்
இன்றையதினம் சீரழிக்கப் பட்டு,
பாழடிக்கப்பட்டு வருகிறது, பண்பாடு
அற்ற சில நம் நாட்டு அரசியல்வாதி
களால்.எனவே நான் கடந்த
பன்நெடுங்காலமாகவே இந்தத்
தூய்மையான நல்லதொரு தமிழ்ச்
சொல்லை பயன்படுத்துவதைத்
தவிர்த்தே வருகிறேன்) எனவே நான்
இந்தக் கால இளம் பெண்டிரே !!
என்றே அழைக்கிறேன். உங்களுக்கு
இந்தக் குறளில் திருவள்ளுவர்
குறிப்பிட்டிருக்கும் " நாணம் "என்ற
சொல் புரியாது,பொருந்தாது,
ஏன்........ஏன்......ஏன் என்றால்
உங்களுக்கு இந்த நாணம் என்ற
சொல்லின் பொருள் என்னவென்று
உங்களுக்கு/இந்தக்கால இளைய
சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்கள்
எவருக்குமே புரியாது. தெரியாது.
ஏன்...ஏன்...ஏன் தெரியாது ?
ஏன் தெரியாது, புரியாதுன்னு நான்
சொல்றேன்னா அந்த நாணம் என்ற
நல்ல குணம் உங்கள்ல யாருக்குமே
கிடையாதே !! அப்புறம், உங்க கிட்ட
இல்லாத ஒன்றினைப் பற்றி நான்
ஏன் உங்ககிட்டே சொல்லி என்
பொன்னான நேரத்தை
வீணடிக்கணும் ?
அட....என்ன...நான்.....சொல்றது ?
சரியா ? அதாலே நான் என்ன
சொல்றேன்னா இந்தக் குறள்
விளக்கம் " அந்தக் காலத்திலே "
வாழ்ந்திருந்த செயற்கை அழகு
சாதனங்களைப் பயன்படுத்தி
தங்களை அழகுறக் காட்டிடும்
திறமை அறிவு ஏதும் இல்லாமல்
இயற்கையான அந்த நாணம் என்ற
வெட்கத்துடன் கலந்திட்ட அந்த
நல்ல உணர்வுகளோடுகூடிய
ஏறத்தாழ ஒரு 35 ஆண்டுகளுக்கு
முன்பு வரை வாழ்ந்திருந்த
பெண்களுக்கு மட்டுமே அந்த
நாணம் என்கின்ற உயர்வான
நற்குணம் என்பது அவர்களுடன்
இணைந்து வந்திருந்தது என்பது
இச்சிறியோனின் உள்மனக் கருத்து.)
கட்டுரை தொடர்கிறது ..................
அழகிய இளம் பெண்ணே !!(35
ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த
இயற்கையாகவே அழகிகளாகத்
தெரிந்த பெண்கள்) ஒன்று நீ
உன்னிடத்தில் கொண்டுள்ள அந்த
வலிமையான ஆயுதமாகிய நாணம்
என்ற நல்ல்லதொரு குணத்தினை நீ
உன்னிடம் இருந்து நீக்கிக்கொள் !!
அல்லது உனது உள் மனதில் நீ
அனுதினமும் ஒவ்வொருக் கணமும்
போற்றி,வணங்கி வருகின்ற
உன்னுடைய நெஞ்சுக்குள்ளே
புதைத்து, மறைத்து
வைத்திருக்கின்ற அந்த " காமம் "
என்கின்ற உயர்ந்த உணர்ச்சிகளின்
உச்சக்கட்ட பரிணாமத்தினை
அடைந்திட இருபாலருக்கும்
(ஆண்&பெண்) உள்ளத்தில்
தூண்டிவிடுகின்ற அந்த காமம்
என்கின்ற உணர்சிகளை விட்டு
விலகிவிடு. பெண்ணே !! நான் ஏன்
இந்த இரண்டு உணர்வுகளைப் பற்றி
மட்டும் உன்னிடம் விளக்கி
கூறுவதற்கு காரணம் இதுதான் :-
இந்த இரண்டினில் அது ஒன்றினை
மட்டுமே நீ வைத்துக்கொள்ள
வேண்டுகிறேன். இல்லை என்றால்
அந்த இரண்டும் உன்னிடம் ஒருசேர
அணிகலன்களாக இருப்பதை, நான்
சத்தியமாகச் சொல்கிறேன்
என்னால் அதனை அடியேனால்
இனியேனும் பொறுத்துக்
கொண்டிருக்க முடியாது எனது
அழகிய/அழகும் அறிவும் மட்டுமே
இணைந்து வாழ்ந்திருந்த 35
ஆண்டுகட்கு முன்புவரை வாழ்ந்த
பெண்களுக்கு மட்டிலுமே நான்
சொல்லும் இந்த நாட்டு நடப்பு
விளக்கம் என்பது பொருந்தும் !!
புரியும் !!என்ற உள்ளம்திறந்து
சொல்லிடும் கருத்துக்களைப்
பதியவைத்து விடைபெறுவது
உங்கள் அனைவரிடமும் இருந்து
நன்றி பாராட்டி வணக்கமும்
கூறுவது உங்களனைவரின் அன்புத்
தமிழ் பேசும் உடன்பிறப்பு மதுரை
T.R. பாலு.
No comments:
Post a Comment