Sunday, December 29, 2013

கல்வியின் சிறப்பு !! --வள்ளுவர் தரும் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 




தினம் ஒரு திருக்குறள்.                         



அதிகாரம்  :-   கல்லாமை.



குறள் எண்:-   41௦.                                         



விலங்கொடு மக்கள் அனையர்             

                                         இலங்குநூல் 


கற்றாரோடு ஏனை யவர்... ... ... ...           



வள்ளுவர் தரும் விளக்கம் :-                   



அறிவு விளங்குவதற்குக் 



காரணமான நூல்களைக் 



கற்றவரோடு ஒப்பிடுகையில் 



கல்லாதவர், மக்களோடு 



விலங்குகளுக்கு உள்ள அளவு 



அவ்வளவு வேற்றுமை உடையவர் 



ஆவர். இது திருவள்ளுவர் நமக்கு 



அருளிய குறளும் அதன்விளக்கமும் 



ஆகும்.                                                                   



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-             



சங்கையா :-  டேய் !! தங்கையா !! 



உன்ன எங்கெல்லாம்டா தேடறது ? 



எங்கடா தொலஞ்சு போனே ?               



தங்கையா :-  அடேய் !! சங்கையா !! 



வந்து நம்ம ஆளும் கட்சி ஆதரவு 



M.L.A. அருள்பாண்டியன் இருக்காரே!!



சங்:- யாரடா இந்த காசுக்காக கட்சி 



மாறின கபோதியாடா?நம்ம 



அஜைகாந்த் கட்சிலே நின்னு 



ஜெவிச்சுட்டு இப்ப நம்ம " அப்பா "



கட்சிலே போயி காசுக்கு ...... 



திங்கப்போனவன்தானடா அந்தக் 



கபோதி அருள்பாண்டியன் ?                     



தங்க:-  டே தம்பி !! அரசியல்ல 



இதெல்லாம் சாதாரணமப்பா !! தம்பி 



நாமெல்லாம் அரசியல்ல முழுநேரப் 



பணியிலே ஈடுபட்டு இருக்கிறதுக்கு 



முக்கிய காரணம் என்னான்றே !! 



மக்களுக்கு உழைக்கிறதுக்கா ? 



இல்ல..இல்ல.. இல்லவே 



இல்ல.....நாம பிழைக்கிறதுக்குடா !! 



இத்த நீ முதல்ல 



புரிஞ்சுக்க..இதைத்தான் நம்ம 



அருள்பாண்டியன் செஞ்சிருக்காரு !! 




தெரியுதா ? அது எப்டிடா தப்பாகும் ?   



சங்:-  சரி !! அத்த விடுறா. நீ இப்ப 



எங்கே போனேன்னு கேட்டேன்ல. 



அதுக்கு இன்னும் பதில் சொல்லவே 



இல்ல..                                                              



தங்:- இல்லடா..நம்ம அப்பா 



ஆட்சியிலே இலவச மிக்சி,விசிறி, 



கிரைண்டர், தரோம்ல...                             



சங்:-  எது..இந்த ஒவ்வொரு ரேசன் 



கார்டுக்கும் கொடுக்குறதாடா?       



தங்:-    டே!! தம்பி !! நீல்லாம் 



அரசியல்ல உருப்படவே மாட்டடா !! 



சங்:- டே என்னடா சொல்றே?                 



தங்:-  ஆமாடா தம்பி ஏண்டா இந்த 



பொசகெட்ட பொதுமக்களுக்கு 




தர்ரதுக்காடா நம்ம அப்பா தேர்தல் 



நேரத்திலே வாக்குறுதி தந்து இந்த 



இளிச்சவா ஜனங்க கிட்டே ஒட்டு 



வாங்கி நாம ஜெவிச்சிருக்கோம் ?       



சங்:-  அடப்பாவி !! என்னடா 



சொல்றே ? ஏழைகளுக்கு 



இல்லையாடா ? இந்த இலவசப் 



பொருள்கள் ?                                                 



தங்:-  போடா மடையா நீ அரசியல்ல 



சத்தியமா சொல்றேண்டா 



உருப்புடவே போறதில்ல.  டே இந்த 



இலவசப் பொருட்கள் அத்தனையும் 



எங்க கட்சிக்காரங்களுக்கு 



அவங்களுக்கு வேணும் என்று 



இருக்கிறவங்களுக்கு   ஒசியாத் 



தர்றதுகுத்தானேடா  மக்கள் 



வரிப்பணத்துலே நாம் ஆட்டயை 



போடுறோம். இது உனக்குத் 



தெரியாதாடா ?  மடையா !!                   



சங்:-  டே பாவம்டா நமக்கு 



ஒட்டுப்போட்ட ஜனங்க. ஏமாத்தக் 



கூடாதுடா. இந்த மிக்சி,விசிறி, 



கிரைண்டர், இதெல்லாம் அந்தஏழை 



மக்களுக்குத் தரலேன்னா அடுத்த 



தேர்தல்ல எப்டிடா நமக்கு ஒட்டு 



போடுவாங்க?நம்மளை மறந்துற 



மாட்டாங்களாடா ? சொல்லுடா ?         



தங்:- போடா FOOL  இந்த முட்டா 



ஜனங்க கிட்ட ஒட்டு வாங்கி 



ஜெயிக்ரதோடஜனங்களை நாம 



மறந்துறனும்டா இல்லன்னுவச்சுக்க 



அடுத்த தேர்தல்ல ஜனங்க நம்மள 



மறந்துருவாங்கடா.  ஆனானப் பட்ட 



பலநூல்கள்  கற்று, பலகாவியங்கள் 



படைத்த நல்ல அறிஞரின் வழிவந்த 



கலைஞரைப்போல்முத்தமிழுக்கும் 



சொந்தக்காரர் அந்த முதுபெரும் 



தலைவரையே அவர் இந்த 



நாட்டுக்கு செஞ்ச நல்ல 



பலதிட்டங்கள், மேல்பாலங்கள், 



 மக்களுக்கு பலன்தரும் நல்ல 



புதுபுது திட்டங்களை அவர் 



அறிவித்ததோடு நின்று 



விடாமல்,நம்ம தலைவரைப் போல, 



அவை அத்தனையையும் அமல் 



படுத்தி இந்த ஜனங்களுக்கு 



எவ்வளவு நன்மைகள் செஞ்சாரு !! 



அப்படிப்பட்ட அந்த நல்லவரையே 



மறந்துதானே இந்த முட்டாள் 



ஜனங்க எங்க கட்சி அறிவித்த இந்த 



இலவசங்களை அடைய அதற்கு 



ஆசைப்பட்டுத்தானே நம்ம கட்சிக்கு 



ஒட்டு போட்டு ஜெயிக்கவச்சு நம்ம 



தலைவர் திரு  வெற்றித் தாமரைச் 



செல்வனை இந்த மாநிலத்தின் 



முதல்வரா தேர்ந்தேடுத்து 



இருக்காங்கடா ? சங்கையா !! 



சந்தேகமே இல்லாமல் 



நம்ம தலைவர் வெற்றித் தாமரைச் 



செல்வன் ஆங்கிலப் பள்ளியிலே 



படித்து பட்டம் பலபெற்று, ஐந்து 



மொழி பேசிடும் ஆற்றல் 



உடையவரா இருக்கலாம். ஆனால் 



அரசியல் பாடத்திலே இவர் பூஜ்ஜியர் 



தானே. இப்ப அரசியலுக்கு 



தேவையானது பட்டப் படிப்புஅல்ல 



அரசியலுக்குத் தேவையான படிப்பு, 



இலக்கணம் எதுன்னு கேட்டீன்னா 



சாதுரியம், புத்திசாலித்தனம், எந்த 



ஒரு விஷயத்தையும் அணுகிடும் 



முறையிலே எதிர்காலத்தைப் 



பற்றிய சிந்தனையோடு 



செயல்படுகின்ற ஆற்றல்,வல்லமை, 



இதெல்லாம் நம்ம முன்னாள் 



முதல்வர் திரு அன்புநிதி அவர்கள் 



கிட்டேதானே இருக்கு. அந்த 



படிப்புலே முன்னாள் முதல்வர் திரு 



அன்பு நிதியை மக்கள் என்றும் நம்ம 



தலைவர் இந்நாள் முதல்வர் 



திரு.வெற்றித்தாமரைச் செல்வனை 



விலங்கு என்றும் திருவள்ளுவரே 



மேலே சொன்ன குறள் தந்த 



விளக்கத்தின்படி சான்றிதழ் 



கொடுத்து இருக்கிறதைநீ 



படிடா முதல்லே. எனக்கு நிறைய 



வேலை இருக்கு. நம்ம வட்டார 



மந்திரிகிட்டே இந்த வார   நம்ம 



பகுதிக்கான வசூல்தொகை 75 



லட்சத்தை நான் கொண்டுபோயி 



கொடுக்கனும்டா. நான் வரட்டா.   



சங்:-  வராதடா. அப்படியே 



போயிருடா. உம் மூஞ்சிலே 



முழிச்சாலே எதுவும் விளங்காதுடா. 



போடி போ !! இன்னும் 2.1/2 வருஷம் 



தானே உங்க ஆட்டம் எல்லாம். 



அதுக்கு அப்பறம் நான் பாடுற பாட்டு 



உங்களையும் உங்க கட்சியையும் 



பாத்து பாடுற பாட்டே இதுதாண்டா. 




" கும்மாளம் போட்டதெல்லாம்             

      அடங்கியதா "? நீங்க !!                           

    கும்மாளம் போட்டதெல்லாம்             

       அடங்கியதா ? உங்க !!                           

    கொட்டமெல்லாம் தன்னாலே           

      ஒடுங்கியதா ?                                           



அப்படீன்னு பாட்டு பாடுவேன். அப்ப 



நீ வந்தா போதும்டா. போ..போ..போ... 



நமது நாட்டு நடப்பு விளக்கம் 



இத்துடன் நிறைவு பெறுகின்றது. 



மீண்டும் அடுத்த குறள்விளக்கத்தில் 



உங்கள் அனைவரையும் 



சந்திக்கிறேன்.



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment