Monday, December 30, 2013

அறம் எனப்படுவது எது ? திருவள்ளுவர் தரும் ஒரு விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



தினம் ஒரு திருக்குறள்.                             



அதிகாரம்   :-  அறன்வலியுறுத்தல்.     



குறள்  எண்:-35.                                             



அழுக்காறு அவாவெகுளி                         

                         இன்னாச்சொல் நான்கும் 


இழுக்கா இயன்றது அறம்... ... ... ... ... ... 



வள்ளுவர் தரும் விளக்கம் :-               



பொறாமை, ஆசை, சினம், 



கடுஞ்சொல், ஆகிய இந்த நான்கு 



குற்றங்களுக்கும் 



இடங்கொடுக்காமல் அவற்றைக் 



கடிந்து(மறந்து)ஒழுகியதே(நடப்பதே



அறம் எனப்படுவதாகும். இது வான் 



புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிய 



திருக்குறளும் அதன் விளக்கமும் 



ஆகும்.                                                                 



 நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             



(இந்தக் கட்டுரையில் இடம் பெறும் 



பெயர்கள்,சம்பவங்கள்,குறியீடுகள், 



இவை எல்லாம் கற்பனையே அன்றி, 



வேறு தனிப்பட்ட எவரையுமோ 



அல்லது இயக்கத்தையோ பற்றிக் 



குறிப்பிடுவது அல்ல.)                               



அது  உலகத்தின் மிகப் 



பழமையானதொரு செம்மொழி 



பேசிடும் மாநிலம். அங்கே சுமார் 



முப்பது மாதங்களுக்கு முன்பு 



நடைபெற்ற மாநிலத் தேர்தலில் 



பொய்யான வாக்குறுதிகளை அள்ளி 



வீசி ஒரு கருப்பு நடிகரின் 



அனுதாபத்தைப் பெற்று அவரது 



வாக்குகளின் உதவியால் ஒரு கட்சி 



ஆட்சிக்கு வந்தது. அதற்கு முன்பு 



நடைபெற்ற நல்லதொரு ஆட்சியை 



மக்கள் மறந்தனர். இந்த 



இலவசங்களுக்கு ஆசைப் பட்டு, 



தங்களது பொன்னான வாக்குகளை



இந்த இப்போதைய ஆளும் கட்சிக்கு 



அளித்ததினால் அந்த மாநில 



மக்கள் படும் துன்பத்திற்கும் 



துயரத்திற்கும் அளவு என்பதே 



கிடையாது. முழுக்க முழுக்க 



பொறாமை, ஆசை, சினம், 



கடுஞ்சொல் இவைகளை மட்டுமே 



தங்களது அன்றாட நிகழ்வுகளில் 



கலந்து அள்ளித் தெளித்துக் 



கொண்டு 



இருக்கும் ஒரு கெடுமதியாளன்தான் 



தற்போது நடப்பு ஆட்சிகட்டிலில் 



அமர்ந்து இருக்கும் தலைமைப் 



பீடத்தில் உள்ளவர் பெயர்தான் 



வெற்றித் தாமரைச் செல்வன். 



பழிவாங்கும் குணம்தான் 



இவனனிந்து இருக்கும் உடைகள். 



பொறாமைதான் இவனது மூளை 



முழுவதும் நிறைந்திருக்கும் 



எண்ணங்கள். ஆசை, இவனுக்கு 



அளவு என்பதே கிடையாது. பேசுவது 



அனைத்தும் கடும் சொற்கள் தான். 



முன்பு ஆண்ட கட்சியின் தலைவர் 



திரு மு.அன்புநிதி. மிகவும் அரசியல் 



திறமை உடையவர். நல்லவர். மிக 



மிக வல்லவர். இவரை தற்போது 



பதவியில் உள்ள வெற்றித் 



தாமரைச் 



செல்வன் இவரது பெயரைச் 



சொல்லித்தான் அழைப்பது 



வழக்கம். ஏய் !! அன்புநிதி என்றே 



அழைத்து பழகியவன் இவன். 



 ஆனால் இதற்கு நேர்மாறான 



குணம் 



கொண்டவர் அன்புநிதி. இன்றளவும் 



அய்யா திரு வெற்றித் தாமரைச் 



செல்வர் அவர்களே என்றுதான் 



மரியாதையோடு அழைப்பார். 



இந்தனைக்கும் இவருக்கு வயது 9௦ 



ஆனால் இவரது அரசியல் 



அனுபவத்தின் வயது கூட 



இருக்காது 



வெற்றிக்கு. அவருக்கு அடுத்தமாதம் 



வந்தால் 66 வயது துவங்கிடும். 



இப்படி பொறாமை, ஆசை, 



சினம்,கோபம், கடுஞ்சொல் பேசிடும் 



குணம், பழிவாங்கும் எண்ணம் 



கொண்ட மனிதர்கள், வெற்றித் 



தாமரைச் செல்வனைப்போல 



எதிர்காலத்தில் மனிதர்கள் 



வருவார்கள் என்றே வள்ளுவப் 



பெருந்தகை இதுபோல குறளை 



இயற்றி இருக்கிறார் என்று 



சொன்னால் அது ஒன்றும் மிகைப் 



படுத்தப்பட்ட சொல் அல்ல. 



இப்படிப்பட்ட கொடுங்கோல் 



ஆட்சியாளர்கள் ஆளும் 



மாநிலத்தில், அரசவையில், அறம் 



எங்கே இருக்கப்போகிறது ? 



ஒருபொழுதும் இருக்காது. 



இறைவன்தான் அந்த மாநில 



மக்களைக் காப்பாற்ற வேண்டும். 



இத்துடன் நமது நாட்டு நடப்பு 



விளக்கம் நிறைவு பெறுகிறது. 



நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன். மதுரை T.R.பாலு. 

No comments:

Post a Comment